போக்சோவில் கைதான போலீஸ் நாகையில் பரபரப்பு

0

போக்சோவில் கைதான போலீஸ் நாகையில் பரபரப்பு

நாகை மாவட்டம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் மனு அளித்துள்ளார் .

2 dhanalakshmi joseph
4 bismi svs

இந்தநிலையில் அந்த புகார் மனு சம்மந்தமாக விசாரிப்பதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் அய்யாசாமி என்பவர் செந்தில்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் . அப்போது வீட்டில் செந்தில்குமார் இல்லாததால் அவரது மகனிடம் சாக்லெட் வாங்க கடைக்கு அனுப்பிவிட்டு அய்யாசாமி செந்தில்குமாரின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .

இதுகுறித்து தனது தந்தையிடம் சிறுமி கூறியதையடுத்து நன்னிலம் போலீஸ்நிலையத்தில் ஏட்டு அய்யாசாமி மீது புகார் மனு அளித்தார் . மேலும் சிறுமி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைக்கப்பட்டார் .

- Advertisement -

- Advertisement -

நன்னிலம் போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையிடம் புகார் தெரிவித்தார் . புகாரை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு துரை நாகை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்தார் . அங்கு விசரானை மேற்கொண்டு போலீஸ் ஏட்டு அய்யாசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் . விசாரணைக்கு சென்ற போலீசாரே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.