கல்லூரிகளின் தரச் சான்றிதழ்கள் விற்பனைக்கு !
நாட்டிலிருக்கும் கல்லூரிகளுக்கு விஜயம் செய்து, அவற்றின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து A, A+, AAA+ என்கிற தரச் சான்றிதழ்களை வழங்கும் அமைப்புக்குப் பெயர்தான் National Assessment and Accreditation Council (NAAC). ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுவது.
இந்த அமைப்பின் குழு ஒன்றுதான் இந்தத் தரவரிசைப் படுத்தும் வேலையைச் செய்கிறது. அது வழங்கும் மதிப்பின் அடிப்படையில்தான் கல்லூரிகளுக்கு அரசின் நிதி வழங்கப் படுகிறது.
நிற்க,
மத்திய புலனாய்வுக் கழகம் (CBI) இந்தக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாகிகள் உட்பட 10 பேரைக் கைது செய்திருக்கிறது. கல்லூரிகளுக்கு அதிக rating வழங்குவதற்காக இவர்கள் “அன்பளிப்புகளைப்” பெற்றனர் என்பதுதான் குற்றச்சாட்டு.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவர்களிடமிருந்து இதுவரை ரூபாய் 37 லட்சம் ரொக்கம், 6 Lenovo மடிக்கண்ணிகள், ஒரு IPhone, 6 Pro mobile, ஒரு தங்க நாணயம், ஆறு american tourister trolley bags ஆகியவை கைப்பற்றப் பட்டிருக்கின்றன.
கல்வித் தரத்தின் விலை இவ்வளவுதானா என்று கேட்க வேண்டாம். இது ஒரு tip of the icebergதான் எனத் தோன்றுகிறது.
— விஜயசங்கா் ராமசந்திரன், சீனியர் பத்திரிகையாளர்.