டிஜிபி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மாநகர காவல்துறை.!

0

டிஜிபி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மாநகர காவல்துறை.!

தமிழகத்தில் பெண்களுகெதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டும் , கொலை, கொள்ளை சம்பவங்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் விதமாக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் பொதுவான உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தார்.

அதில், ஒவ்வோரு மாவட்ட, மாநகர காவல்துறையும் தினந்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய அதிகாரிகளின் விவரங்களை, பொதுமக்களுக்கு தெரிந்து கொள்ளும் விதமாக காவல்துறை வலைத்தளங்களில் பதிவிடக்கூறி உத்தரவு ஆரம்பத்திலேயே பிறப்பித்திருந்தார்.

ஆனால், அந்த உத்தரவை மற்ற மாவட்டங்கள தொடர்ந்து பின்பற்றிவரும் நிலையில், தமிழகத்தின் மையப்பகுதியான, அதிக மக்கள்தொகை, குற்றச்சம்பவங்கள் நிகழக்கூடிய மாவட்டமாக திருச்சி இருந்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் டிஜிபி உத்தரவை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இருந்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக திருச்சி மாநகர காவல்துறை நுண்ணரிவு பிரிவு அலுவலகத்திற்கு தொடர்புக்கொண்டு திருச்சி மாநகர காந்தி மார்கெட் காவல் உதவி ஆணையரின் தொலைபேசி எண்ணை கேட்டிருந்தோம். அவர்கள் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கேட்குமாறு நம்பர் கொடுத்தனர். காந்தி மார்கெட் காவல் நிலையத்திற்கு தொடர்புக் கொண்டு பேசிய போது, நம்மிடம் பேசியவர் அது கேம்ப் ஆபிஸில் தான் கேட்கனும் என்று கூறினார்.

பின்னர் இன்னொரு அதிகாரி அவரிடம் போனை வாங்கி நம்மைப்பற்றி தகவல் கேட்டார் நாம் கூறிய பின் அதிகாரியோட நம்பர் தரமுடியாது. நேரில் வந்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று தொடர்பை துண்டித்தார்.

திருச்சி மாநகர காவல்துறையில் பொதுமக்களின் குரலாய் இருக்கிற பத்திரிகையாளர்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் உயிர் போகும் நேரத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து என்ன பிரயோஜனம்.

-ஜான்கென்னடி 

Leave A Reply

Your email address will not be published.