அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேசிய ஒருமைப்பாட்டு நாள் , சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம்

திருச்சியில் அடகு நகையை விற்க

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ஆம் தேதி, இந்தியா முழுவதும் ஒற்றுமையின் உறுதியை நினைவூட்டும் ஒரு நாள் அனுசரிக்கப்படுகிறது. அது தான் தேசிய ஒருமைப்பாட்டு நாள் (Rashtriya Ekta Diwas).

இந்த நாள், இந்திய வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்ற, “இரும்பு மனிதர்” என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சுதந்திர இந்தியாவின் அரசியல், சமூக ஒருங்கிணைப்பில் அவர் ஆற்றிய பங்கு, வரலாற்றில் அழியாத மைல்கல்லாக திகழ்கிறது.

சர்தார் வல்லபாய் படேல்
சர்தார் வல்லபாய் படேல்

முதல்வர் பிறந்தநாள்

சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கை வரலாறு

1875 அக்டோபர் 31 அன்று குஜராத்தின் நாதியாத் பகுதியில் பிறந்தார். சட்டத்துறையில் சிறந்து விளங்கிய அவர், பின்னர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்தார்.

மகாத்மா காந்தியாரின் வழிகாட்டுதலில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து, சுதந்திரத்திற்கான பல முக்கிய இயக்கங்களை முன்னெடுத்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் துணை பிரதமரும் ஆனார்.

அந்தக் காலத்தில் இந்தியாவில் இருந்த 562 சிறு ராஜ்யங்களை ஒற்றுமைப்படுத்தி, ஒரே இந்தியக் குடியரசாக இணைத்தார்.

இந்த சாதனைக்காகவே அவர் “இந்திய ஒருமைப்பாட்டுத் தந்தை” என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.

சர்தார் வல்லபாய் படேல் சிலை
சர்தார் வல்லபாய் படேல் சிலை

உலகின் உயரமான சிலை சர்தார் வல்லபாய் படேலின் தேசபக்திக்கும், ஒருமைப்பாட்டிற்குமான அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது நினைவாக ‘Statue of Unity’ என்ற பிரம்மாண்ட சிலை குஜராத்தில் கேவடியா (Ekta Nagar) பகுதியில் கட்டப்பட்டது.

இந்த சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது , இது உலகின் மிக உயரமான சிலை ஆகும். 2018 அக்டோபர் 31 அன்று, பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சிலை அமைந்துள்ள பகுதி, “ஏகதா நகர்” என அழைக்கப்படுகிறது . அதாவது ஒற்றுமையின் நகரம். சுற்றுலா தளமாக மாறியுள்ள இந்த இடம், இந்தியர்களுக்கு ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அவரது அர்ப்பணிப்பு , ஒரு தேசம், ஒரு கனவு.

சர்தார் படேல் நம்பியிருந்தது:

நாடு வலிமையாக இருக்க வேண்டும் என்றால், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அவர் மதம், மொழி, இனம் என்ற எல்லைகளை மீறி, “ஒரு தேசம் , ஒரு அடையாளம்” என்ற கனவை நனவாக்கினார்.

அவரது தீர்மானம், உறுதி, மற்றும் நாட்டுப்பற்று, இன்றளவும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு ஊக்கமாக உள்ளது.

ஒற்றுமையே இந்தியாவின் ஆற்றல்.

இன்று தேசிய ஒருமைப்பாட்டு நாளில் நாம் நினைவுகூர வேண்டியது,

ஒற்றுமை என்பது வெறும் சொல்லல்ல, அது நம் தேசத்தின் உயிர் ஓட்டம்.

சர்தார் வல்லபாய் படேல் உருவாக்கிய ஒற்றுமையின் பாதையில் நாம் பயணிக்கும்போது,

ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று

நாம் வேறுபட்டாலும், நம் இதயம் ஒன்று அது இந்தியா!!!!!

 

 —    மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.