ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா!
கள்ளக்குறிச்சி மாவட்டம் எமப்பேர் ரவுண்டானா அருகில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை நிர்வாகம் நகராட்சி கள்ளக்குறிச்சி ரூ. 16.21 கோடி மதிப்பீட்டில், 5.47 பரப்பளவில், 78 கடைகள், 55 க்கும் மேட்பட்ட பேருந்து நிற்க்கும் அளவுக்கு மிக பிரமான்டமாக கட்டப்பட்ட நகராட்சி புறநகர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா.
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரிஷிவந்தியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்.க. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் S.S.சிவசங்கர் நகராட்சி புதிய புறநகர் பேருந்து நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மற்றும் புதிய வழித்தடங்களுக்கு புதிய பேருந்தை கொடியசைத்து திறந்து வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர்,சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக் கண்ணன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் நகர மன்ற தலைவர் சுப்பராயலு நகராட்சி ஆணையர் சரவணன் உட்பட, மாநில, மாவட்ட,ஒன்றிய,நகர பேரூர்,கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பொது மக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.