பத்திரிகையாளர்களின் நீண்டநாள் ஏக்கத்தை ஸ்கோர் செய்த அதிமுக !
அதிமுக தேர்தல் அறிக்கையில் பத்திரிக்கையாளர்களுக்கான அறிவிப்புகள், வரிசை எண் 264 முதல் 268 வரையிலான 5 வாக்குறுதிகள் முக்கிய கவனத்தை பெற்றிருக்கின்றன.
மாநில அளவில் மட்டுமின்றி, தாலுகா அளவில் உழைக்கும் உள்ளூர் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையதள நிருபர்களுக்கும், அரசு அங்கீகார அட்டை, மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் பாரபட்சமின்றி வழங்கப்படும்.
சொந்தமாக வீடு கட்ட விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம் இல்லாத (ஆனால், நீண்ட காலமாகப் பணியாற்றும்) உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ10.இலட்சம் வரை முழுமையான வட்டியில்லா வீட்டுக்கடன் வழங்கப்படும்.
பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் வருமான உச்சவரம்பு நீக்கப்படும்.
தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில், பத்திரிகையாளர்கள் வீடுகட்டிக் கொள்வதற்கு குடியிருப்பு மனைகள் வழங்கப்படும்.
தற்போது பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம், இனி காட்சி ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்படும்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.