துறையூரில் முறுக்கு மொத்த விற்பனையாளர்களான கணவன் மனைவி கடன் தொல்லையால் தற்கொலை முயற்சி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ணவன் பரிதாபமாக சாவு ! உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவிக்கு தீவிர சிகிச்சை !

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த அரசு மருத்துவமனை அருகே உள்ள முத்து நகரை சேர்ந்தவர் சுரேஷ்(45) இவரது மனைவி சங்கீதா வயது 37 இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை என தெரிகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கணவன் மனைவி இருவரும் வீட்டிலேயே முறுக்கு மிச்சர் இனிப்பு பலகாரம் செய்து துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்து வந்துள்ளனர் இந்நிலையில் தொழிலுக்காக தெரிந்த இடங்களில் கடன் அதிகமாக பெற்றதாக கூறப்படுகிறது.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு மிரட்டியதாக  கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த கணவன் மனைவி இருவரும் வீட்டிலேயே காய் நறுக்கும் கத்தியால் தனக்குத்தானே இருவரும் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டனர் கழுத்தில் ரத்த காயங்களுடன் கணவன் மனைவி இருவரும் வலி தாங்காமல் கதறி உள்ளனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இவர்களின் அலறல் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று இருவரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி சுரேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துறையூர் பகுதியில் கடன் தொல்லையால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.