அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மனைவி கொலை – கணவன் காவல் நிலையத்தில் சரண்டர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

விருதுநகர் அருகே மனைவி கொலை கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார் !

விருதுநகர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த செந்தூரப் பாண்டியன் (40) லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்பனா (38) என்பவருடன் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு மகாசக்திகுமார் செல்வகணபதி என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே செந்தூரப் பாண்டியன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இருவரும் அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் செந்தூரப் பாண்டியனிடம் வாழ விரும்பாத மனைவி கல்பனா விவாகரத்து பெற முடிவு எடுத்து வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது,

சம்பவத்தன்று கல்பனாவின் அண்ணன் சசிகுமார் இளநீர் வியாபாரம் செய்து வருவதாகவும்.வெளியூரிலிருந்து இளநீர் வாங்குவதற்காக தனது தங்கையிடம் பணம் கேட்பதற்காக இந்திரா நகரில் உள்ள வீட்டிற்கு சென்று வீட்டின் முன் நின்று கதவைத் தட்டி உள்ளார்,

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது உள்ளே செந்தூரப்பாண்டி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார், பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை தட்டி உடைத்துள்ளனர், அப்போது செந்தூரப் பாண்டியன் கையில் கத்தியுடன் தப்பி சென்றுள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும் உள்ளே சென்று பார்த்தபோது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கல்பனா உயிருக்கு போராடி வந்துள்ளார்,உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கல்பனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்,

மேலும் கல்பனா அண்ணன் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து செந்தூர பாண்டியனை தேடி வந்த நிலையில்,விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் செந்தூரப் பாண்டியனை சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்,

அதில் மனைவி இன்னொரு ஆண் நபருடன் பேசி வந்ததாகவும், தொடர்ந்து கண்டித்து வந்தேன் மேலும் அதே தவறை தொடர்ந்து செய்து வந்தார் இதற்கிடையில், என்னை வேண்டாம் என நினைத்து நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார், நானும் நீதிமன்றத்தில் கல்பனா உடனே சேர்ந்து வாழ விருப்பம் என தொடர்ந்து நீதிமன்றத்தில் தெரிவித்து வந்தேன்,

இதற்கிடையில் பொங்கல் விடுமுறையில் இருந்த நான் கல்பனாவின் வீட்டிற்கு சென்று இந்த பிரச்சனை தொடர்பாக பேசி வந்தோம் அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு எனது கையில் வைத்திருந்த கத்தியால் கல்பனாவின் கழுத்தை அறுத்துக் கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

– மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.