செல்லூர் ராஜூவுக்கு எதிராக மத்திய ஆயுத காவல்படை நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தினர் புகார்
மதுரையில் செய்தியாளர்கள் அரங்கில் நடைபெற்ற சந்திப்பில் பேசிய தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் முதன்மைச் செயலாளர் மனோகரன் ….

காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக இந்திய அரசு கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்துர் என்ற தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வெற்றி பெற்றது. இதை பாரத பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் இந்திய மக்களும் பாராட்டி பெருமைப்படுகின்ற நேரத்தில் செல்லூர் ராஜு அவருடைய அரசியல் சுய லாபத்திற்காக ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதற்காக எங்களுடைய வண்மையான கண்டடத்தை பதிவு செய்து கொள்கிறோம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த பேச்சுக்கு அவர் பகிரங்க மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் அவருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது பேச்சு அறியாத சிறு பிள்ளைத்தனமாக இருப்பதாகவும் உடனடியாக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இதனைத் தொடர்ந்து மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவருக்கு எதிராக தற்போது புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.