பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
மதுரையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு செய்யக்கோரிகளை நிறைவேற்ற கோரி கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு துப்புரவு தூய்மை பணியாளர்கள் உரிமைச் சங்கம் சார்பாக பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, கொரோனா காலகட்டத்தில் அறிவித்த ஊக்கத்தொகை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பியவாறு பதாகைகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கிராமப்புறங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தரை குறைவாக பேசுவதாகவும் எந்த ஒரு உபகரங்களும் இல்லாமல் பணியாற்ற வைப்பதாகவும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை உடனடியாக அரசு கருத்தில் கொண்டு விரைவாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.