உலகம் 6 நாட்களில் படைக்கப்பட்டதா ? இது அறிவியலா அல்லது குறியீடா ? தொடர் – 2
பைபிளில் உலகம் 6 நாட்களில் படைக்கப்பட்டதாகக் ஆதியாகமம் 1 விரிவாக எழுதியிருக்கிறார்கள். நீங்கள் பைபிளை எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அறிவியல் பூர்வமான உண்மையாகவோ அல்லது ஒரு குறியீடாகவோ பார்க்கப்படுகிறது. இது குறித்து பைபிள் சொல்லும் விளக்கம் கவனிக்க வேண்டியவை.
“சாயங்காலமும் விடியற்காலமுமாகி” என்ற சொற்றொடர் அதிகமுறை மீண்டும் மீண்டும் வருவதால், இது 24 மணிநேரக் கொண்ட ஆறு சாதாரண நாட்களைக் குறிக்கிறது என்கிறார்கள். கடவுள் சர்வவல்லவர் என்பதால், அவர் நினைத்தால் 6 நாட்களில் மட்டுமல்ல, ஒரு நொடியில் கூட உலகைப் படைக்க முடியும் என்பது கிறிஸ்தவர்கள் வாதம்.
இது நவீன அறிவியலின்படி பிரபஞ்சத்தின் வயதாகக் கருதப்படும் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முரணாக உள்ளது. இது அறிவியல் மற்றும் பைபிளை இணைக்கும் ஒரு விளக்கமாகும்.
எபிரேய மொழியில் “யோம்” (Yom) என்ற சொல்லுக்கு “நாள்” என்று பொருள் உண்டு, ஆனால் அது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியையும் குறிக்கும். இதே போல் பைபிளில் “கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறது” ( 2 பேதுரு 3:8 ) என்ற வசனத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இதன்படி, 6 நாட்கள் என்பது 6 நீண்ட யுகங்களைக் (Eras) குறிக்கிறது.
பைபிளை ஒரு அறிவியல் பாடப்புத்தகமாகப் பார்க்காமல், அதன் ஆன்மீகமாக புத்தகமாக பார்க்கிறார்கள். காரணம் 6 நாட்கள் என்பது கடவுள் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்குடன் படைத்தார் என்பதைக் காட்டுகிறது. “நாட்கள்” என்பது மனிதர்களுக்கு 7 – வது நாளில் ஓய்வெடுக்கும் முறையைக் கற்பிக்கப் பயன்படுத்தப்பட்ட வழியாகவும்.
முதல் 3 நாட்களில் உலகிற்கான இடங்களை (வானம், கடல், நிலம்) உருவாக்கிவிட்டு, அடுத்த 3 நாட்களில் அவற்றை நிரப்பினார் (சூரியன், மீன்கள், விலங்குகள்) வரிசையாக பார்க்கப்படுகிறது.
நீங்கள் அறிவியல் ரீதியாகப் பார்த்தால் 6 நாட்கள் என்பது பிரபஞ்ச வளர்ச்சியின் படிநிலைகளைக் தெரியும் ஆனால், விவிலியத்தின் ஆழமான நம்பிக்கைப் பார்வையில் இது கடவுளின் வல்லமையைக் காட்டும் ஒரு அற்புதமாக தெரிகிறது. திருச்சபை உள்ளிட்ட பல நவீன சபைகள், அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொண்டு, படைப்பு நிகழ்வை ஒரு ஆன்மீக விளக்கமாகவே கருதுகின்றன.








Comments are closed, but trackbacks and pingbacks are open.