ஒரே நாடாக இணைந்து போர் இராணுவ வீரர்களுடன் துணை நிற்க வேண்டும் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்திருந்தனர். சந்தோஷ் நாரயணின் இசையில் பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் நல்லவரவேற்பைப் பெற்றிருந்தது. திரைப்படமும் நல்லவரவேற்பைப்பெற்றிருந்தது. இந்நிலையில் மதுரை சம்பட்டிப்புரம் பகுதியில் உள்ள  திரையரங்கிற்கு படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வருகை தந்து படத்தின் இடைவேளையில் ரசிகர் மத்தியில் தோன்றி பேசினார் சூர்யா ரசிகர்கள் சார்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு  மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் ரசிகர்கள் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். பின்னர் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ..

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டிஎனது ஒவ்வொரு படமும் வெளியாகும் போது மதுரையில் தான் இருப்பேன்  மதுரை திரையரங்கில் தான் ரசிகர்களுடன் படத்தை பார்ப்பேன் ஆனால் இந்த முறை சில பல பணி நிமித்தமாக சென்னையில் இருக்கும் சூழல் ஏற்பட்டது. என்னுடைய எல்லா படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் தான் வரும்.

வெகுவானா ரசிகர்களுக்கு எனது படம் பிடிக்கும் சிலருக்கு அதே போல படம் கனெக்ட் ஆகாமல் போகும். ஜிகர்தண்டா படத்திற்கு நெகட்டிவ் கேம்ப் போன்ற விமர்சனங்கள் வரவில்லை, ஆனால் ரெட்ரோவிற்கு வந்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜிகர்தண்டா கம்மிதான், ஆனால் கலவையாக விமர்சனங்கள் ரெட்ரோ விற்கு வந்தாலும் வசூல் ரீதியாக நன்றாக செய்துள்ளது.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டிமக்கள் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக பார்ப்பார்கள் விமர்சனங்கள் அதை பாதிக்காது. படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு சூர்யா சார் மகிழ்ச்சியாக உள்ளார். இந்த படத்தில் இருந்து கிடைத்த வசூலில் 10 கோடியை அவர் அகரம் பவுண்டேஷன் மூலமாக கல்விக்கு செலவழிப்பது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. என் தயாரிப்பாளரிடமிருந்து கார் போன்ற பரிசுகளை பெறுவதை விட அகரம் வாயிலாக பல மாணவர்கள் கல்வி கற்க உள்ளது. கார் போன்ற பரிசு பொருளை விட உயர்ந்ததாக உள்ளது.  உயர்ந்த சிறந்த பரிசாக உள்ளது.

Apply for Admission

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

போர் என்பது நாம் இப்போது இங்கு பேசிக் கொண்டிருக்கும் வேளையில் நமக்காக எல்லையில் நமது ராணுவ வீரர்கள் சண்டை செய்து கொண்டிருக்கின்றனர். நம்மக்களுக்காக இந்திய ராணுவம் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் நாம் எப்போதும் ஒரே நாடாக நாம் நம்முடைய முப்படை ராணுவ வீரர்களுடன் துணை நிற்க வேண்டும்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டிரெட்ரோவின் கதைக்களம் வேறு.  புரட்சி தான் சர்வாதிகாரத்தின் பொழுதுபோக்கு அது ஒரு எமோஷனலான விஷயம். புரட்சி சார்ந்த படம் பண்ணும்  சூழல் வரும் போது விடுதலை புலிகள் பிரபாகரனின் வாழ்க்கையை தழுவி படம் இயக்கலாம்.

நான் சோசியல் மீடியாவை பெரிதாக பார்ப்பதில்லை. அஜித் அவர்களுடன் படம் பண்ணுவதாக வரும் தகவல் ரூமர். ரஜினி சார் மெட்ரோ பாத்து பாராட்டினார். மீண்டும் சூர்யாவுடன் படம் பண்ணும் வாய்ப்பு நிறைய உள்ளது என்றார்.

 

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.