முதல்வரின் ரெட் லிஸ்டில் மாவட்ட செயலாளர் !

0

நெற்களஞ்சிய மாவட்டத்தில், வெற்றிலைக்கு பெயர் போன தொகுதியின் எம்.பி-யாக பட்டுக்கோட்டை கவிஞரின் பெயரைக் கொண்டவர் இருந்து வருகிறார்.

இவரின் சமீபத்திய செயல்பாடுகள் தி.மு.க தலைமையை பெரிதும் டிஸ்டர்ப் செய்துள்ளதாம். காரணம், எம்.பி – யின் தொகுதியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி வாங்கி, கட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இதனை சமீபத்தில் மாண்புமிகு சின்னவர் நெற்களஞ்சிய மாவட்டத்திற்கு விசிட் அடித்தபோது, கட்டடம் பாதி வேலையிலேயே ரிப்பன் வெட்டி திறந்தார்.

இந்நிலையில் சின்னவர் திறந்த கட்டட பணியானது தற்போது வரை முடிவுக்கு வராமல் இருந்து வருகிறதாம். காரணம், என்னவென்றால் அறிவாலயம் போன்று கட்டாமல், ஹோட்டல் விடுதி போன்று கட்டப்பட்டுள்ளதால், இதற்கு அனுமதி கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவியுள்ளதாம்.

இதுகுறித்த ரிப்போர்ட் சமீபத்தில் கட்சி தலைமை காதுக்கு செல்லவே எம்.பி-க்கு முதல்வர் நேரில் கூப்பிட்டு டோஸ்விட்டதுடன், அவர் வகிக்கும் மா.செ பதவிக்கும் செக் வைக்க உள்ளதாம்.

– ஆதிரன்

Leave A Reply

Your email address will not be published.