தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு!!!!
தீபாவளி வருகிற அக்டோபர் மாதம் 20 ம்தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
கீழ்க்காணும் தேதிகளில் இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ——- பயண நாள் — பயண கிழமை
ஆகஸ்ட் 17 — அக்டோபர் 16-2025 — வியாழன்
ஆகஸ்ட் 18 — அக்டோபர் 17-2025 — வெள்ளி
ஆகஸ்ட் 19 — அக்டோபர் 18-2025 — சனிக்கிழமை
ஆகஸ்ட் 20 — அக்டோபர் 19-2025 — ஞாயிறு
ஆகஸ்ட் 21 — அக்டோபர் 20-2025 — திங்கட்கிழமை – தீபாவளி பண்டிகை
ஆகஸ்ட் 22 — அக்டோபர் 21 -2025 — செவ்வாய்
ஆகஸ்ட் 23 — அக்டோபர் 22-2025 — புதன்கிழமை
வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.
வட இந்திய இரயில் பட்டியல் மற்றும் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.
முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும்….
Comments are closed, but trackbacks and pingbacks are open.