ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி !
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது இறந்த பணியாளர் குடும்பம் மற்றும் 43 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 26 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பில் நிதி உதவி நிர்வாக இயக்குர் K.தசரதன் 05.07.2025 வழங்கினார்.
பணியின்போது இறந்த 1 பணியாளர் குடும்பத்திற்கு ரூ 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் ஓய்வுபெற்ற 43 பணியாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் என ரூ.26 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கான காசோலைகளையும் நிர்வாக இயக்குர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை நிதி அலுவலர் T.சந்தானகிருஷ்ணன், பொது மேலாளர்கள் K.சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்), N.முத்துக்குமாரசாமி (கும்பகோணம்), S.சிவசங்கரன்(கரூர்), D.சதீஷ் குமார் (திருச்சிராப்பள்ளி), K.ரவிக்குமார் (காரைக்குடி), முதுநிலை துணை மேலாளர், (மனிதவள மேம்பாடு H.ராஜேந்திரன், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.