திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மார்ச் 25 2025 மாலை 6:00 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில் இந்திய திருநாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மத நல்லிணக்கம் நிலவுகிற நாடு. இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் சமய வேறுபாடு இன்றி சகோதரத்துவ உணர்வோடு வாழ வலியுறுத்தினார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

முன்னதாக கல்லூரியின் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கில் வாழ்த்துரை வழங்கி இப்தார் நோன்பில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். கல்லூரியின் செயலர் அருள் முனைவர் கே அமல் அவர்களும், கல்லூரி முதல்வர் முனைவர் மரியதாஸ் அவர்களும் வாழ்த்துரை வழங்கி சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

நிகழ்ச்சியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பொருளாளர் ஹாஜி ஜமால் முகமது அவர்களும் கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமல ரத்தினம் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் இறுதியில் கவுரவ விருந்தினரான திருச்சி மாவட்ட அரசு ஹாஜி மவுலவி முப்தி முனைவர் கே ஜே ஜலில் சுல்தான் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி மற்றும் துவா செய்து இப்தார் விருந்தினை தொடங்கி வைத்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நிகழ்வில் கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் ராஜேந்திரன், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோசப் கல்லூரியின் உள்தர மதிப்பீட்டு குழுவின் உதவி புல முதன்மையர் முனைவர் குர்ஷித் பேகம் அவர்கள் செய்திருந்தார்.

நிகழ்வில் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவ மாணவியர் மட்டுமல்லாது பல்வேறு மதங்களை சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்ட நிகழ்வு மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

 

—   அங்குசம் செய்திப்பிரிவு.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.