அனுமதியின்றி கருந்திரி தயாரிப்பு ! வட மாநில சிறுவா்கள் உயிரிழப்பு !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.மேட்டுப்பட்டியில், சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பிற்கு தேவையான கருந்திரி தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்பட்ட விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வட மாநில சிறுவர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷபிகுல் அலி (வயது 13), செய்யது உசைன் (வயது 14) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பநாயக்கன்பட்டி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனுமதியின்றி பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிக்கப்பட்டதா, இதில் யாருக்கு தொடர்பு உள்ளது, குழந்தை தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட சட்ட விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.