அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அனுமதியின்றி கருந்திரி தயாரிப்பு ! வட மாநில சிறுவா்கள் உயிரிழப்பு !

திருச்சியில் அடகு நகையை விற்க

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.மேட்டுப்பட்டியில், சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பிற்கு தேவையான கருந்திரி தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்பட்ட விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வட மாநில சிறுவர்கள் உயிரிழந்தனர்.

கருந்திரி தயாரிப்புஉயிரிழந்தவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷபிகுல் அலி (வயது 13), செய்யது உசைன் (வயது 14) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பநாயக்கன்பட்டி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனுமதியின்றி பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிக்கப்பட்டதா, இதில் யாருக்கு தொடர்பு உள்ளது, குழந்தை தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட சட்ட விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

—   மாரீஸ்வரன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.