ஜல்லிக்கட்டு மைதான கட்டுமான பணிகள் ! கள ஆய்வில் அமைச்சா்!
திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.
விமர்சையாக நடைபெற்று வருகின்ற ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு நிரந்தர மைதானம் கேட்ட கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சூரியூர் பகுதியில் 3 கோடியில் பணிகள் நிறைவு தருவாய் எட்டியுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தின் நடைபெற்று வரும் இறுதி கட்ட கட்டுமான பணிகளை பார்வையிட்டு விழாவிற்கான ஆயத்த வேலைகளை விரைவுப்படுத்த கேட்டுக்கொண்டு ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இந்நிகழ்வின் போது ஒன்றிய கழகச் செயலாளர்கள் கங்காதரன் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.