அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு !

திருச்சியில் அடகு நகையை விற்க

ஜவஹர்லால் நேரு 1889 நவம்பர் 14 அன்று உத்தரப் பிரதேசத்தின் அலஹாபாத்தில் பிறந்தார். அவரது தந்தை மோத்திலால் நேரு ஒரு பிரபல வழக்கறிஞர். ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே முடித்த அவர், பின்னர் இங்கிலாந்தின் ஹாரோ பள்ளி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தார். இந்தியாவுக்கு திரும்பியதும் சட்டத் தொழிலில் ஈடுபட்டார். ஆனால் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் அவரை பெரிதும் ஈர்த்ததால், சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக இணைந்தார். இந்திய சுதந்திரத்திற்கு பின்னர், 1947ல் நாட்டின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை: இந்தியாவின் நீண்ட காலம் பிரதமராக  இருந்தவர்கள் - ஜவஹர்லால் நேரு (1947-1964) | எகனாமிக் டைம்ஸ்இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் கைகளில் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தவர். குழந்தைகள் மீது அவருக்கு இருந்த அன்பினாலும், அவர்களுடன் பொழுதைப் பகிர்ந்து கொண்ட பொழுதினாலும், அவரை நேசமாக “சச்சா நேரு” என்று குழந்தைகள் அழைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று, அவரது பிறந்த நாளை குழந்தைகள் நாள் என்று கொண்டாடுகிறோம்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நேரு, கல்வி என்பது சுதந்திரமான சிந்தனைக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அடிப்படை என்று நம்பினார். அதனால் தான் IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் தொடக்கத்திற்கு அவர் முக்கிய பங்கு வகித்தார். நாடு முழுவதும் நூலகங்கள், அறிவியல் மையங்கள், குழந்தைகள் பள்ளிகள் உருவாக அவர் ஊக்கமளித்தார்.

அவரை பற்றி தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்களைப் பற்றி பார்ப்போம்…

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தெரிந்திருக்கும் விஷயங்கள்:

நவம்பர் 14 நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளின் சுதந்திர சிந்தனை மற்றும் படைப்புத்திறனை வளர்க்க, அவர் கல்வி முறையில் மாற்றங்களைப் பரிந்துரைத்தார்.

அவரின் வாழ்க்கை நோக்கம்  “இன்று குழந்தைகள், நாளை இந்தியாவின் எதிர்காலம்.”

தெரிந்திருக்காத சில விஷயங்கள்:

நேரு குழந்தைகளிடம் பேசும்போது அதிகாரபூர்வமான மொழியை விட, குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் கதைகள், படங்கள், கவிதைகளைப் பயன்படுத்துவார். குழந்தைகளுக்கான “Letters from a Father to his Daughter” என்ற நூலை அவர் தனது மகள் இந்திராவிற்கே எழுதிய கடிதங்களாகத் தொடங்கினார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Happy Children's Day 2021: Wishes, Quotes, Images, Greetings, Messages,  WhatsApp And Facebook Statusஅவருக்கு ரோஜா பூவை மிகவும் பிடிக்கும்; அதனால் அவர் சட்டையின் பாக்கெட்டில் ரோஜா பூவை அணிவது வழக்கமாக இருந்தது . இதை குழந்தைகள் அவர் மீது காட்டிய அன்பின் அடையாளமாகவும் பார்க்கிறார்கள்.

உலக நாடுகளுக்கு குழந்தை நலத்திட்டங்களை அமைக்க இந்தியா முன்வந்ததில் நேரு முக்கிய குரல் ஆயிருந்தார்.

குழந்தைகள் நாள் என்பது பள்ளியில் பேனா, பென்சில், சாக்லேட் வாங்கும் விழாவல்ல.

இது குழந்தை மனது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அவர்களின் சிந்தனை சுதந்திரமாக இருக்க வேண்டும்.

கனவுகள் நொறுக்கப்படாமல் வளர வேண்டும் என்பதற்கான நினைவுநாள்.

குழந்தைகள் நாட்டின் வருங்காலம்.

அவர்கள் நகைச்சுவையும், ஆர்வமும், கேள்விகளும் இந்த நாட்டின் வளர்ச்சியை வடிவமைக்கும் சக்திகள்.

சச்சா நேரு நம்பிய எதிர்காலத்தை நாமே கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இதுதான்.

நேரு தொடர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்து வந்தார். பல ஆண்டுகள் அதிக பணிச்சுமையுடன் தொடர்ந்து பணியாற்றிய அவர், 1964 மே 27 அன்று நியூடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இதயத் திடீர் நெஞ்சுவலி (heart attack) காரணமாக காலமானார். நாடு முழுவதும் துக்கம் அறிவிக்கப்பட்டது. அவரது மரணம் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய இழப்பாகக் கருதப்பட்டது. அவர் மறைந்த போது அவரது வயது 74.

 

—    மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.