பாரம்பரிய தீபாவளி ஸ்பெஷல் கடலை பருப்பு சுய்யம்!
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நாம பார்க்கப் போற ரெசிபி கடலைப்பருப்பு சுய்யம். இந்த ரெசிபி எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு இருந்தாலும் வாங்க எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு 100 கிராம், வெல்லம் 100 கிராம், ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, மஞ்சத்தூள் ஒரு சிட்டிகை, மைதா ஒரு கப், தேங்காய் துருவல் சிறிதளவு, எண்ணெய் தேவையான அளவு, முந்திரி பொடியாக நறுக்கியது 2 ஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி அதில் வெள்ளத்தை கொட்டி கட்டி இல்லாமல் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மஞ்சத்தூள் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நீர் விட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். வேக வைத்த கடலைப்பருப்பை மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று விட்டு எடுக்கவும். வெல்ல பாகுடன் வேக வைத்த கடலைப் பருப்பையும் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும். அதனை மைதா கலவையில் முக்கி காய்ந்த எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் கடலைப்பருப்பு சுய்யம் ரெடி!!
— பா. பத்மாவதி







Comments are closed, but trackbacks and pingbacks are open.