அங்குசம் சேனலில் இணைய

மழையை முன்னறிவிப்பு செய்யும் அதிசய ஆலயம் !!!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நமது இந்திய மண்ணில் எத்தனையோ அதிசயங்கள் நிறைந்த மகத்தான கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன. நிலம், நீர், நெருப்பு , காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் மற்றும் நவகிரகங்களின் சக்திகளை வெளிப்படுத்தும் விதத்தில் முன்னோர்களால் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவை காலம் காலமாக மக்களின் பல்வேறு சிக்கல்களை நம்பிக்கை மற்றும் பிரார்த்தனைகளின் மூலம் தீர்ப்பதை அன்றாட வாழ்வில் பலரும் உணர்ந்து இருக்கிறார்கள். நமது தென்கை பகுதியில் உள்ள கோவில்கள் கட்டமைப்பு மற்றும் ஆன்மீக சூழல் பூஜை முறைகள் ஆகிய நிலைகளை ஒப்பிடும்போது வடமாநிலங்களில் உள்ள கோவில்களில் கட்டமைப்பு இதர வழிபாடுகள் மற்றும் பூஜை முறைகளில் மாறுபட்ட நிறைய வித்தியாசங்கள் இருப்பதை கவனிக்க முடியும்.

பூரி ஜெகநாதர் ஆலயம்
பூரி ஜெகநாதர் ஆலயம்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மழைக் கோவில்:

அந்த அடிப்படையில் உத்தர பிரதேசம் கான்பூர் பிதார்கவான் பெஹதா என்ற இடத்தில் உள்ளது ஜெகன்நாதர் ஆலயம். இந்த கோவிலை **மழைக்கோவில்** என்றும் அழைக்கிறார்கள். ஏனெனில், ஒரு வருடத்தில் அந்தப் பகுதியில் பெய்யும் மழை அளவு பற்றிய தகவல்களை அந்த ஆலயம் குறிப்பிடுவதாக தெரிய வந்துள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கோவில் பற்றிய சிறப்புகளை பார்க்கலாம்:

பொதுவாக நமது பகுதிகளில் குறிப்பிட்ட வருடத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு குறைவது அல்லது மழை இல்லாத சூழல் ஆகிய காரணங்கள் முன்னிட்டு சுவாமிக்கு பொங்கல் வைப்பது கிராம மக்கள் மண்சோறு சாப்பிடுவது என்பது போன்ற நம்பிக்கை சார்ந்த வித்தியாசமான முறைகளை கடைப்பிடிப்பது வழக்கம். வருண பகவானின் அருளை பெற **அமிர்தவர்ஷினி** என்ற ராகத்தை சங்கீத வல்லுநர்கள் அல்லது வாத்திய கலைஞர்களை கொண்டு நதிக்கரை அல்லது கடற்கரையில் இசைக்க வைப்பதும் பல நேரங்களில் நடப்பது உண்டு.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பூரி ஜெகநாதர் ஆலயம்ஆனால், இவை எதுவும் இல்லாமல் மேற்கொண்ட கோவில் மூலம் அறியப்படும் மழை பெய்வது பற்றிய குறிப்புகள் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அதன், அடிப்படையில் விதை விதைப்பது, அறுவடை உள்ளிட்ட விவசாய பணிகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

மழைக்கான முன்னறிவிப்புகள்:

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நடைபெறும் தேர் திருவிழா சமயத்தில் கோவிலின் மேற்கூரையில் நீர் துளிகள் உருவாகும் விதத்தை கணக்கில் கொண்டு அந்த வருடத்தின் மழைப்பொழிவு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்கிறார்கள். தேர் திருவிழா சமயத்தில் கோவிலின் மேற்கூரையில் வெறும் ஈரப்பதம் மட்டும் இருப்பதால் மழையின் அளவு சாதாரணமாக இருக்கும் என்றும் நீர்த் திவலைகள் உருவாகி நின்றால் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும் நீர் திவலைகள் உருவாகி கீழே சொட்டு சொட்டாக விழுந்தால் அந்த வருடத்தில் நல்ல மழை பொழியும் என்றும் அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. இதில், உள்ள அதிசயம் என்னவென்றால் கிட்டத்தட்ட நூறாண்டுகளாக அந்த நம்பிக்கைக்கு மாறாக மழையின் அளவுகள் பொய்த்து விட்ட சம்பவங்கள் இதுவரை நடைபெறவில்லை என்பதுதான். இதனை அந்தப் பகுதியில் உள்ள மக்களும் கோவிலில் பூஜை செய்பவர்களும் குறிப்பிடுகிறார்கள். ஈரப்பதம் அல்லது நீர்த் திவலைகள் தோன்றவில்லை என்றால் அந்த வருடத்தில் மழை இருக்காது என்பதும் ஆச்சரியமான நடப்பாக இருந்து வருகிறது. பொதுவாக மழை பெய்வதற்கு ஒரு வாரம் முன்பாகவே மேற்கொண்ட அறிகுறிகள் தென்பட தொடங்குமாம்.

பூரி ஜெகநாதர் ஆலயம்மின் காந்த சக்தி உள்ள சக்கரம்:

அந்தக் கோயிலில் கடந்த ஏழு தரம் தலைமுறைகளாக பூஜையில் ஈடுபட்டு வரும் தலைமை பூசாரியான தினேஷ் சுற்றுலா என்பவர் குறிப்பிடும்போது அசோகர் காலத்தில் ஸ்தூபி வடிவத்தில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அமைப்பு இப்பகுதியில் வேறு எங்கும் இல்லை அதோடு கோவிலின் மேற்கூரையில் உள்ள சக்கர வடிவ அமைப்பில் மின்காந்த சக்தி இருப்பதால் மழைக்காலங்களில் ஏற்படும் இடி மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்கிறார். வித்யாசமான கட்டமைப்பு கொண்ட இந்த மழைக்கோவில் இப்போது அந்த மாநில தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் கோவிலின் மேற்கூரையில் உருவாகும் நீர்த் திவலைகளுக்கான அறிவியல் பூர்வமான காரணத்தை அறிய முயற்சிகள் மேற்கொண்டார்கள். ஆனால், இதுவரையில் யாராலும் அது பற்றிய மர்மத்தை கண்டறிய இயலவில்லை.

மேலும், இந்தக் கோவில் ரத யாத்திரை போன்ற விழாக்களை கண்டு ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. இந்த ஜெகன்னாதர் ஆலயம் ஒடிசாவில் உள்ள பூரியில் உள்ள பிரபலமான ஜெகநாதர் ஆலயத்திலிருந்து வேறுபட்டது. பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை (தேரோட்டம்) 2025 ஜூன் 27 அன்று தொடங்கியது. இது ஜெகன்நாதர் பலபத்திரர் மற்றும் சுபத்ரா ஆகியோர் பூரி கோவிலில் இருந்து குண்டிச்சா கோவிலுக்கு சென்று பக்தர்கள் தெருக்களில் தேர்களை இழுத்து கொண்டாடும் ஒரு உலகப் புகழ்பெற்ற திருவிழா ஆகும்.

 

 —    பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.