அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நரசிம்ம அவதாரம் – (சிங்க அவதாரம்)

திருச்சியில் அடகு நகையை விற்க

பெருமாளின் அவதாரங்களில் இது நான்காவது அவதாரம் ஆகும். 24 நிமிடங்கள்! கடிகை நேரமே நிகழ்ந்த மிகவும் உக்கிரமான அவதாரம்.

அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்கு தூணில் திருமால் சிங்க வடிவத்தில் வெளியிட்டு அரக்கனை கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன் பிறப்பாகிய கிரன்யாக்ஷனை கொன்றுவிட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால், அவனுக்கு பரந்தாமன் மீது சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. உடனே, ஆயுதத்தை தன் கையில் எடுத்தான். தன் அரக்கர் குல கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம் அரக்கர்கள் குல கொழுந்துகளே! நீங்கள் என் கட்டளைக்கு கீழ்ப்படிந்து உடனே செயலாற்றுங்கள் என்று கூறி தமையனின் இறப்பிற்கு காரணமான ஸ்ரீஹரியை மும் தேவர்களையும் அழிக்க வேண்டும். நீங்கள் உடனே புறப்பட்டு போய் அந்தணர்கள், தேவர்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்றான்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இரண்யகசிபு கட்டளையை ஏற்ற அரக்கர்கள் நோன்பு, விரம்‌ நோற்ற பெரியவர்களையும், அந்தணர்களையும் கொன்று குவித்தனர். யாராலும் வெல்வதற்கு அரிய வீரத்தை தான் பெற்றாமல் ஸ்ரீஹரியை ஒழிக்க முடியாது என உணர்ந்தான். அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையும் வேண்டி பரமனை நோக்கி தவம் செய்ய முற்பட்டான். மந்திர மலை சாரலுக்கு வந்தான். கால் கட்டை விரலை தரையிலே ஊன்றினான். கைகளை மேலே தூக்கினான். விண்ணுலகை நோக்கி நின்றான். ஊழி காலத்தில் காணும் சூரியனுடைய ஒளி கிரகங்களை போல செஞ்சடை விரிய காட்சி அளித்தான். உக்கிரமான தவத்தில் பிரம்மனை நோக்கி ஏகாக் ரசித்தத்துடன் ஆழ்ந்தான். நாட்கள் நகர்ந்தன வருடங்கள் பல ஓடின. இவனுடைய தவத்தால் எழுந்த யோகாக்னியின் தகிப்பை தாங்க முடியாமல் சகல ஜீவராசிகளும் வருந்தின. தலையிலிருந்து மேக கூட்டம் போன்ற புகை மண்டலம் எழுந்தது. மூன்று உலகத்தையும் அது சூழ்ந்தது. ஆறுகளும் சமுத்திரங்களும் கொந்தளித்தன. திசைகள் எங்கும் ஒரே தீப்பொறி கக்கி அனல் எறிந்தது. தேவர்கள் அவனுடைய தவ பலத்தினால் தாங்கள் பசுமமாகி விடுவோமோ என பயந்தனர். தேவர்கள் உடனே பிரம்மாவிடம் முறையிடச் சென்றனர்.

நரசிம்ம அவதாரம் - The history of srivaishnavamபிரம்மாவிடம் தேவ தேவா! உங்கள் பதவிக்கு ஆபத்து தரும் வகையில் இரண்யகசிபு தவம் மேற்கொண்டு இருக்கிறான். அவனது தவத்தால் உண்டாகும் அக்னியை எங்களால் தாங்க முடியவில்லை. உடனே, அவனது தவத்தை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்றனர். தேவர்கள் சொன்னதை கேட்ட பிரம்மா மந்திர மலை சாரலுக்கு வந்தார். அங்கே, இரண்யகசிபு தோலும் சதையும் மிஞ்சி எலும்பு கூடாக இருந்தான். அவனை இந்நிலையில் பார்த்து இரண்யா! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அவன் மீது தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்தார். கட்டையில் மூண்ட தீயை போல் கசிபு வெளி வந்தான். உருக்கி வார்த்த பொன் மேனியுடன் பிரம்மதேவனை வணங்கினான். லோக பிதாவே! உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்க கூடாது. அது மட்டும் அல்ல எனக்கு உள்ளும்- புறமும், பகலிலும் – இரவிலும், விண்ணிலும்-மண்ணிலும் மரணம் ஏற்பட கூடாது.

https://www.livyashree.com/

எவ்வித ஆயுதங்களாலும், பிராணிகள், மனிதர்கள், தேவர் அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியாதபடி நல்ல வல்லமையை வீரத்தை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டும். எனக்கு நிகர் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத்தையும் நானே கட்டிய ஆள வேண்டும். மேலாக, லோக பாலகருடன் தேவராகிய தாங்கள் அனுபவிக்கும் பெருமையை நான் அடைய வேண்டும். யோகம், சமாதி, தவம் முதலியவற்றால் ஏற்படும் சக்திகள் அனைத்தும் எனக்கு வர செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு மறைந்தார். இரண்யகசிபுவுக்கு இப்படி ஒரு வரத்தை பிரம்மா கொடுத்து விட்டாரே என தேவர்கள் அனைவரும் வருந்தினர். வரத்தை பெற்று திரும்பி இரண்யகசிபு தன் எண்ணத்தை உடனே நிறைவேற்றிக் கொண்டான்.

தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்கலோகத்தையும் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான். வேள்விகள் மூலம் வரும் அவிர்பாகம் முழுவதையும் அவனே கிரஹித்து கொண்டான். மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள் கொடுமைகளை தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிட்டனர். காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன் அவர்களுக்கு அனுகிரகம் செய்தார். விரைவிலேயே அவனை வதைப்பதாக அவர்களுக்கு அசரரி மூலம் அறிவித்தார். இந்த அரக்கர்களின் அரக்கனாகிய இரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சியை நான் அறிவேன். அதற்கு, ஆவணன் செய்கிறேன் கொஞ்சம் பொறுத்திடுங்கள்.

எவன் தேவர்கள், பசுக்கள்,வேதங்கள், வேதியர், ஆகியோர் மீதும் என்னிடமும் பகைமை தலை தூக்குமோ அப்போதே அவன் அழிந்து போவான். இந்த அரக்க ராஜன் தன் மகன் பிரகலாதனை துன்புறுத்துவான். அப்போது, நான் அவனை கொல்ல சித்தமாவேன் என்று உரைத்தார். இரண்யகசிபுவிற்கு சிலாதன், பிரகலாதன், அணுகிலாதன், அமகிலாதன் என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில், பிரகலாதன் மட்டும் சிறந்த விஷ்ணு பக்தனாக எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனின் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தான். அசுரகுரு சுக்ராச்சாரியாருக்கு சண்டன், அமர்க்கண்ட் என இரண்டு பிள்ளைகள். இரண்யகசிபு அவர்களை தன் புதல்வர்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாரிகள் உடைய குமாரர்களுக்கும் ஆசிரியராக இருந்து பணியாற்ற செய்தான். ஒருநாள் கசிபு தன் செல்வ குமரனை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தான்.

அது சமயம் குமாரா! நீ இத்தனை நாள் என்ன கற்றாய்! அவற்றை எனக்கு சொல் என்றான். அப்பா நான் கற்ற அனைத்தையும் எப்படி கூறுவது ஏதாவது ஒரு கேள்வி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றான். கசிபுவும் அவ்வாறே மனிதனுக்கு நலம் தருவது எது? என்று வினவினான். எவர் ஆசை, பற்று முதலியவற்றை விட்டு அவைகள் எல்லாம் வெறும் மாயை மாறாக ஸ்ரீஹரியே மெய்யான பொருள் அவர் திருவடியை சரணடையும் நபர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றான். பிரகலாதன் பரம விரோதியான ஸ்ரீஹரியின் பெயரை உச்சரிக்கிறானே! என சிறுவனை கடிந்து கொண்டு அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை வரச் சொல்லுங்கள் என்றான். ஆசிரியர்கள் நாங்கள் பலமுறை என்ன சொல்லிக் கொடுத்தாலும் காதில் போட்டுக் கொள்ளாமல் எல்லாம் ஸ்ரீஹரியின் செயல் என்று எங்கள் வார்த்தைகளை உதாசினம் செய்தான். இதை, தங்களிடம் எப்படி கூறுவது என்றே நாங்கள் இத்தனை காலம் தயங்கினோம் என்றார்கள். ஏதோ, அந்தணர்கள் இவனுக்கு தவறாக கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள் மற்றபடி சின்னஞ்சிறு பிராயத்தினன் ஆகிய இவனுக்கு இது தெரிய நியாயம் இல்லை. ஆகவே, யாரும் அணுகாதபடி இனி தனிமையில் அமர்த்தி பாடம் கற்பியுங்கள் என்று அவன் ஆணையிட்டான்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பின்பு, பிரகலாதனின் அறிவுகூர்மையைமையை பார்த்து அவனிடம் ஆசிரியர்கள் கேட்டார்கள். அப்பனே பிரகலாதா! மற்றவர் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யார் கற்பித்தது? இல்லை உனக்கு தானாக வந்ததா? உண்மையை சொல் என்றனர். நான் என்றும் நீ என்றும் பிரித்து பார்க்கும் புத்தி வெறும் மாயை அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய் அவனே மெய் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனக்கு கற்பித்தவன் கற்ற பொருள் கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீ ஹரியே! அவரை தவிர வேறில்லை என்றான் பிரகலாதன். பிறகு, அறம் பொருள் இன்பம் பற்றிய பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றனர். மீண்டும் கசிபு பிரகலாதனிடம் பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிறப்பான ஒன்றை சொல் கேட்கிறேன் என்றான். அதற்கு, பிரகலாதன் ஹரியின் கதைகளை கேட்க வேண்டும் அவன் லீலைகளை வாயார பேச வேண்டும் ஹரி உருவத்தை நினைக்க வேண்டும் ஹரியின் சேவையே உத்தமம் ஹரி பூஜையே சிறந்தது. காலம் முழுவதும் ஹரியை பின்பற்ற வேண்டும் என்று ஹரியை புகழ்ந்து பேசினான். அந்தணர்களே! நீங்களே ஆசிரியர்களாக இருந்து இதைத்தான் கற்றுக் கொடுத்தீர்களா? என்று கடுமையான குரலில் கசிபு கர்ஜித்தான். ஆசிரியர்கள் நடுநடுங்கி அரசே நாங்கள் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றனர்.

வெற்றிநடை போடும் 'மகா அவதார் நரசிம்மா'..! ரூ.210 கோடிக்கும் மேல் வசூலித்து புதிய சாதனை..! - TamilWireஉடனே, குருமுகமாக சுற்றி இதையெல்லாம் நீ யாரிடம் கற்றாய்? என்றான் கசிபு, அதற்கு பிரகலாதன் தந்தையே உலக இன்பங்களில் ஆசைப்பட்டு உழர்பவர்களுக்கு யார் சொல்லியும் பக்தி வராது தானாகவும் பக்தி ஏற்படாது ஆனால், முற்றிலும் துறந்த தொண்டர்களுக்கு இறைவனை அறியும் பாக்கியம் கிடைக்கும் என்றான். இப்படி ஹரியின் நாமத்தை உச்சரிக்கும் இந்த பிள்ளை எனக்கு தேவையில்லை. இவனை கொன்று விடுங்கள் என்று ஆணையிட்டான்? அவனை எப்படி எல்லாமோ கொல்ல முயன்றும் இரண்யனின் ஆட்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே, தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் இதைப் பற்றி கேட்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு சிறுவனை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு சுக்ராச்சாரியார் இடம் சென்றான் இரண்யன். ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் அவனுக்கு அசுர தர்மங்களை உபதேசிக்க முயன்றனர். அவனோ தன் சக மாணவர்களுடன் விளையாடச் சென்றான். பிரகலாதன் தன் சகாக்களுக்கு ஸ்ரீஹரியின் பெருமையும் புகழையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான். அப்போது, அந்த மாணவன் பிரகலாதா குருவிடம் உபதேசம் பெறாமல் இப்படி ஒரு ஞானம் பேசும் அறிவு உனக்கு எப்படி வந்தது என வினவினர்.

தோழர்களே! என் தந்தை பிரம்மாவை குறித்து அதிக பராக்கிரமமும் அழியா வாழ்வும் வளமும் தேடி மகேந்திரகிரி சாரலில் உக்கிர தவம் இயற்றினார். அது சமயம் அவருக்கு பயந்து இருந்த தேவர்கள் தைரியத்தோடு தத்தம் இருப்பிடம் வந்து அசுரர்களை தாக்கினார். அசுர தலைவனான என் தந்தை இல்லாத காரணத்தால் அசுரர்கள் தேவர்களிடம் தோற்று ஓடினர். இந்திரனோ அசுரேந்திர பட்டினத்தை சூறையாடினான். அது சமயம் கர்பவதியான என் தாயாரை பிடித்து இழுத்துக் கொண்டு போனான். வழியில் **நாராயண** **மகரிஷி** அவனை சந்திக்க நேர்ந்தது. இந்திரனே! கர்ப்பவதியான பெண்ணை அதிலும், நிராதரவான பெண்ணை இப்படி வருத்துவது தகாது? மேலும், இவர் பிறர் ஒருவரது மனைவி அல்லவா! என்று நாரதர் இந்திரனை கேட்டார். நாரதரை இந்திரன் வணங்கி **மகரிஷியே**! அசுர மகரிஷியான இவளுடைய கர்ப்பத்தில் தேவர்களை வதைக்கும் சிசு ஒன்று உருபெற்று வருகிறது. இவளுக்கு நான் தற்சமயம் எந்த கேடும் செய்யப் போவது இல்லை. அவள் கருத்தரித்தவுடன் எனது எதிரியை முளையிலேயே கிள்ளி விட்டு இவளை பாதுகாப்புடன் அனுப்பி வைப்பேன் என்றான். இந்திரனே! நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவள் கருவறையில் வளரும் சிசு அசுர குல பிறப்பாக இருந்தாலும், அந்த சிசு சிறந்த பாகவத உத்தமனாக விளங்கப் போகிறான்.

ஸ்ரீஹரியிடம் அளவற்ற பக்தி கண்டு அனைவராலும் போற்றப்படுவான். அவனால் உனக்கோ தேவர்குலத்திற்கோ எவ்வித தீங்கும் ஏற்படாது என்றார் நாரதர். இதை கேள்விப்பட்ட இந்திரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். மேலும், நாரதரே தங்கள் கருத்துப்படி இவளை பாதுகாப்புடன் அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று அவளது காலடியை தொட்டு வணங்கினான். அதன் பிறகு, என் தாயாரை நாரதர் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று ரட்சித்தார். என் தாய் கர்ப்பவதியாக இருந்ததால் அவளுக்கு தர்மங்களை உபதேசம் செய்தார். என் தந்தை தவம் முடிந்து திரும்பியதும் அவளை அனுப்பி வைத்தார். அச்சமயம் கேட்ட உபதேசங்களை என் தாயார் தந்தையின் மீது வைத்த பற்றுதலால் மறந்துவிட்டாள். ஆனால், கருவில் இருந்த நான் பிறக்கும் போதே ஸ்ரீ மந்நாராயணனிடம் அளவற்ற பக்தியுடன் பிறந்தேன் என்றான். மேலும், தீய குணங்களை விட்டுவிட்டு நாள்தோறும் ஹரி பஜனை செய்ய வேண்டும் என்றும் கூறினான். இதனை அறிந்த ஆசிரியர்கள் இரண்யனிடம் சென்று கூறிவிட்டனர். கடும் கோபமடைந்த இரண்யன் பிரகலாதனை இழுத்துக்கொண்டு வரும்படி ஆணையிட்டான். பிறகு, மடப்பதரே!! எங்கும் நிறைந்திருக்கும் உன் ஹரி இப்பொழுது எங்கே இருக்கிறார் என்று வினவினான்? தந்தையே அவர் சர்வவியாபி அவர் இல்லாத இடமே இல்லை என்றான் பிரகலாதன். இதைக் கேட்டு கசிபு கடக்கடவென்று சிரித்தான். டேய் பிரகலாதா! உன்னால் பிரலாபிக்கப்படும் அந்த ஹரி எங்கும் இருக்கிறான் என்றாய் சரி இப்பொழுது சொல் இதோ என் கண் எதிரே இருக்கும் ஸ்தம்பத்தில் இருக்கிறானா? இல்லையா? அதை பார்ப்போம்.

இப்போது உன்னை தலை வேறாகவும், உடல் வேறாகவும் போகும்படி என் உடைவாளால் வெட்டி எறிய போகிறேன். நீ சரண் புகுந்த அந்த ஹரி நாராயணன் உன்னை வந்து காப்பாற்றட்டும் என்று பிரகலாதனை மிரட்டினான். தனது சிம்மாசனத்தில் இருந்து இறங்கி வந்து எதிரே இருந்த தூணை குத்தி விட்டு தன் உடைவாளை ஓங்கியவாறு நின்றான். அப்போது, அண்டமே பிளந்து விட்டது போன்று ஓர் பேரரவம் அந்தத் தூணில் எழுந்தது. அந்த ஓசை கேட்டு பிரம்மதேவாதியர் அண்டங்களே அழிந்தது போல அஞ்சினர். தன் மகனை வெட்டும் வெறியில் நின்ற அசுரேந்திரனுக்கு அப்பேரொளியின் காரணம் புரியவில்லை. தன்னிடம் அளவில்லா பக்தி கொண்ட பாலகன் பிரகலாதனின் சொல்லை மெய்யாக பரந்தாமன் அந்தத் துணை பிளந்து வெளிவந்தார். அவரது தோற்றத்தைக் கண்ட இரண்யகசிபு அதிர்ந்தான். இது என்ன தோற்றம். இது மனித உருவம் இல்லை மிருக உருவம இல்லை. மனித சிங்கம் போல் தெரிகிறதே என நினைத்து திகைத்தான்.

நரசிம்மமூர்த்தி ஆக அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் தோற்றத்தை கண்ட இரண்யன் அச்சமுற்றான். அந்த நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்தை உற்று கவனித்தான். விண்ணை தொடுவது போன்ற வளர்ந்த நெடுமேனி பிடரி தலை மயிர்களால் தடித்த முகம் வீங்கிய கழுத்து முகத்தில் உருக்கி வார்த்தை பொன் போன்ற கண்கள் பெரு மலை குலைப்போல் திறந்திருக்கும் வாய் அதில், கோரைப்பற்கள் கூர்ந்த வாள் போல் தொங்கும் நாக்கு தூக்கினின்ற காதுகள் விரிந்த மார்பு குறுகிய யாரும் அருகே போக பயப்படும் படியான தோற்றம். ஸ்ரீஹரியின் தோற்றத்தைக் கண்ட அசுரர்கள் நாலா புறமும் ஓடினர். இதை கண்ட இரண்யன் தன்னை கொல்ல ஸ்ரீ ஹரி எடுத்த அவதாரமே இது என உணர்ந்தான். கதையை கையில் ஏந்தி நரசிம்மரை எதிர்கொண்டு மோதினான். எனினும், கதையால் தன்னை புடைக்க வந்த கசிபுவை கைகளால் நரசிம்மர் பற்றினார். அவனை தன் தொடை மீது வைத்து கொண்டு கூர்ந்த தன் நீண்ட நகங்களால் இரண்யகசிபு உடலை கீரி கிழித்தார்.

ரத்தம் பீறிட்டு பாய்ந்தது. நரசிம்மருடைய முகம் அக்னி பிளம்பாக காணப்பட்டது. அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும் அவரது உக்கிரமான கோபம் தனியவில்லை. நரசிம்ம மூர்த்தியின் அகோர தோற்றம் கண்டு அவரிடம் நெருங்கவே அனைவரும் அஞ்சினர். ஒவ்வொருவரும் அவருக்கு வந்தனம் செய்தனர். ஸ்ரீஹரியின் சீற்றம் குறையாதலால் தேவர்கள் ஸ்ரீதேவியை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். அன்னையும் அங்கு வந்து அடங்காத கோபத்தை கண்டு அஞ்சினாள். அந்நேரம் பிரகலாதனிடம் பிரம்மா சொன்னார். அப்பா.. பிரகலாதா!! ஸ்ரீஹரிக்கு உன் தந்தையின் மீது கொண்ட கோபம் இன்னும் தணிந்ததாக தெரியவில்லை. நீ அவர் அருகே சென்று சாந்தப்படுத்து என்றார். அவனும் அவ்வாறே மெல்ல மெல்ல நடந்து நரசிம்ம மூர்த்தியிடம் சென்றான். கை குப்பினான்.

அவர் திருவடி தொட்டு தரையில் விழுந்து வணங்கினான். தன் பாதங்களை பிடித்த பிரகலாதனை பார்த்து ஸ்ரீ ஹரி மனம் உருகினார். அவன் தலை மீது தன் தாமரைக்கரம் வைத்து வாழ்த்தினார். பெருமானின் திருக்கரம் தீண்டியதும் அவனுக்கு மின்னலென மெய்யறிவு பிறந்தது. மயிர்க்கூச்செறிய தன் மனம் கசிந்து கண்ணீர் மல்கி துதி பாடினான். அதுபோல, பிரகலாதன் தான் அடைய விரும்பும் பதவியை அனைவருக்கும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அனைவரும் பாராட்டினர். நரசிம்மரின் மனம் மகிழ்ந்தது. துதித்து நின்ற பாலகனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அவனும் என் மனதில் எவ்வித கோரிக்கையும் எழாமல் இருக்கும் படி தாங்கள் திருவருள் புரிய வேண்டும் என வேண்டினான். மனம் மகிழ்ந்து மாதவன் பிரகலாதனை சுரேந்திரத்திற்கு அரசனாக இருக்கும் படி அனுக்கிரகித்தார். மேலும், நீ பிறந்த புண்ணியம் உன் தகப்பனோடு 21 மூதாதையரும் கடைத்தேறினர் என அருளிச்செய்தார். இவ்வாறே ஸ்ரீமந் பகவானுடைய நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் தோன்றியது. திருமால் அவதாரங்களில் மிகக் குறுகிய கால அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகும். நரசிம்ம மூர்த்தியை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும். ஸ்ரீஹரியை அனுஷ்டிக்கிறவர்கள் மேன்மை அடையலாம். இவ்வாறு நான்காவது அவதாரம் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் நரசிம்ம அவதாரம் முற்றுப்பெறுகிறது.

 

—    பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.