அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஊடக சுதந்திரத்தின் அடையாளம் “தேசிய பத்திரிக்கை நாள்”

திருச்சியில் அடகு நகையை விற்க

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 அன்று இந்தியா முழுவதும் “தேசிய பத்திரிக்கை நாள்” (National Press Day) கொண்டாடப்படுகிறது. இது ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், செய்தியாளர்களின் சமூகப்பொறுப்பையும் நினைவூட்டும் நாளாகும். இந்தியாவின் “பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா” (Press Council of India – PCI) 1966 நவம்பர் 16 அன்று உருவாக்கப்பட்டது. இதுவே இந்நாளை கொண்டாடுவதற்கான அடிப்படை. இந்த கவுன்சில் உருவாக்கப்படுவதற்கான சிந்தனை 1956ஆம் ஆண்டு முதல் “பிரஸ் கமிஷன்” பரிந்துரையிலிருந்து தோன்றியது.

அதில், ஊடக துறையில் நெறிமுறைகள் மற்றும் தொழில்முறை ஒழுங்கை நிலைநிறுத்தும் ஒரு சட்டபூர்வ அமைப்பு தேவையென குறிப்பிடப்பட்டது.பின்னர் 1978ல் “Press Council Act” இயற்றப்பட்டு, PCI சட்டபூர்வ நியாயவாத அமைப்பாக செயல்படத் தொடங்கியது. பொதுவாக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைவர் பதவியை வகிப்பார். உறுப்பினர்களில் ஊடக அமைப்புகள், நாடாளுமன்றம் மற்றும் கல்வி, சட்டம், கலாசாரம் போன்ற துறைகளின் வல்லுநர்கள் அடங்குவர்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

PCIயின் முக்கிய நோக்குகள் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பது, பத்திரிகை நெறிமுறைகளை பராமரிப்பது மற்றும் ஊடகத்தின் தரநிலைகளை மேம்படுத்துவது. அது பத்திரிகை அல்லது ஊடக நிறுவனங்களின் தவறான செய்தியளிப்பு, நெறிமுறை மீறல் போன்ற புகார்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது. மேலும், அரசாங்கம் அல்லது பிற அமைப்புகள் ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டால் PCI தலையீடு செய்ய முடியும். ஜனநாயகத்தில் ஊடகம் “நான்காவது தூண்” எனப்படுகிறது. அது மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே தகவலின் பாலமாக செயல்படுகிறது.

தேசிய பத்திரிக்கை நாள்
தேசிய பத்திரிக்கை நாள்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த நாள், பத்திரிகைத் துறையின் சுதந்திரத்தையும் அதன் பொறுப்பையும் உறுதிப்படுத்தும் நாளாகக் கருதப்படுகிறது.நவீன ஊடக சூழலில் புதிய சவால்கள் உருவாகியுள்ளன . சமூக ஊடக வளர்ச்சி, போலி செய்தி (Fake News), மற்றும் தகவல் வேகத்தின் அழுத்தம் போன்றவை. இந்நிலையில், ஊடகம் உண்மை மற்றும் நம்பகத்தன்மையை காத்து செயல்படுவது அவசியம் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் PCI “National Awards for Excellence in Journalism” விருதுகளை வழங்குகிறது. அதில் “Raja Ram Mohan Roy Award” முக்கியமானதாகும். மேலும், PCI ஒரு நினைவு வெளியீடு (Souvenir) வெளியிட்டு, முக்கிய ஊடக நிபுணர்களின் கருத்துகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகிறது. ஆண்டுதோறும் “தேசிய பத்திரிக்கை நாள்” ஒன்றுக்கு ஒரு தலைப்பு (Theme) தேர்ந்தெடுக்கப்படுகிறது.

2023ல் “Media in the Era of Artificial Intelligence”, 2024ல் “Changing Nature of Press” ஆகியவை தலைப்புகளாக இருந்தன. இவை ஊடகங்களின் வளர்ச்சி, மாற்றத்தைக் குறிக்கும் வகையில் அமைந்தன.நாடு முழுவதும் இந்த நாளில் செமினார்கள், கலந்துரையாடல்கள், விருது விழாக்கள் நடைபெறுகின்றன. PCI மற்றும் பல ஊடக அமைப்புகள் இணைந்து, பத்திரிகை நெறிமுறைகள், செய்தியாளர்களின் பாதுகாப்பு, மற்றும் தவறான செய்திகளைத் தடுக்கும் முயற்சிகளை முன்வைக்கின்றன.

நவம்பர் 16ம் தேதி கொண்டாடப்படும் “தேசிய பத்திரிக்கை நாள்”, ஒரு சுதந்திரமான, பொறுப்புள்ள பத்திரிக்கையின் அடையாளமாக திகழ்கிறது. மக்களாட்சியின் அடிப்படை மதிப்பை பாதுகாக்கும் ஊடகங்களின் பங்கை இந்த நாள் வெளிப்படுத்துகிறது. உண்மை, சுதந்திரம், பொறுப்பு ஆகிய மூன்று குணங்களே ஊடகத்தின் சிறப்பை நிர்ணயிக்கின்றன என்பதைக் கூறும் முக்கிய விழிப்புணர்வு நாளாக இது திகழ்கிறது.

 

-மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.