அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வேளாண் மாணவா்களின் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சியில் அடகு நகையை விற்க

ஆலத்தூர் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவிகள், ஊரக வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு விளக்கப்படம் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாணவி ர. ரலிஷா, உலக சுகாதார அமைப்பு (WHO) அடிப்படையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மனிதர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் நச்சுத்தன்மையின் அளவைப் பொருத்து வகைப்படுத்தப்படுவதை விளக்கினார். அதன்படி,

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

#சிவப்பு நிறம் – மிக அதிக நச்சுத்தன்மை (Extremely Hazardous)

மிகக் குறைந்த அளவே உயிருக்கு ஆபத்தானது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

#மஞ்சள் நிறம் – அதிக நச்சுத்தன்மை (Highly Hazardous)

மிகுந்த கவனத்துடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

#நீல நிறம் – மிதமான நச்சுத்தன்மை (Moderately Hazardous)

பொதுவாக விவசாயத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது.

#பச்சை நிறம் – குறைந்த நச்சுத்தன்மை (Slightly Hazardous)

பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் ஆபத்து குறைவாக இருக்கும்.

விழிப்புணர்வு கூட்டம்மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்தினால் மனித உடலுக்கு தீங்கு இல்லை என்றும், பயன்படுத்தும் முன் அதன் நச்சுத்தன்மை வகையை கண்டறிந்து, பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஊரக வேளாண்பணி அனுபவத்தின் மூலம் மாணவிகள் நடைமுறை அனுபவம் பெறுவதோடு, விவசாய சமூகத்திற்கு பயனுள்ள அறிவையும் வழங்கி வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.