வணங்காமுடி அவர்களுக்கு புகழ் வணக்கம்!
தமிழியக்க மாநில பொறுப்பாளர், எழுத்தாளர், பெரியார் பற்றாளர், கல்வியாளர். ஐயா வணங்காமுடி அவர்கள் நேற்று இரவு (5.4.25) ஓசூரில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தது என்பதே யாரும் அறியாத அளவில் எப்போதும் துடிப்புடன் செயல்படுவர்.
ஓசூரில் நடக்கும் இலக்கிய – தொழிற்சங்க கூட்ட நிகழ்வுகளுக்கு தனது பள்ளியை எப்போதும் மனமுவந்து பயன்படுத்தி கொள்ள அனுமதியளிப்பவர்.
நாங்கள் நடத்திய ஐயா கி.வெங்கட்ராமன் எழுதிய “கல்வி அரசியல்” நூல் வெளியீட்டு விழாவில் வணங்காமுடி அவர்கள் மிகச்சிறப்பான ஆய்வுரையை வழங்கினார்.
ஓசூரில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என தமிழன்பர்கள் கூடி விவாதித்தபோது, சிலையின் செலவில் கணிசமான பங்கை தான் தருவதோடு, நிதியும் திரட்டலாம் என ஊக்கமளித்தார்.
நிமிர்ந்த நடை
தெளிவான பேச்சு
துடிப்பான செயல்பாடு
தமிழிய சிந்தனை கொண்ட
வணங்காமுடி அவர்களின் மறைவு தமிழியக்கத்திற்கும் – தமிழ்ச்சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்.
ஐயா வணங்காமுடி அவர்களுக்கு புகழ்வணக்கம்.
*தமிழ்மைந்தர்* *மன்றம்* . *ஓசூர்*