மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் !
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.01.2026 சனிக்கிழமை நேரம் காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை பிஷப் ஹீபர் கல்லூரி. வயலூர் ரோடு, புத்தூர், திருச்சி-17 நடைபெறவுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 150-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள்,
- 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைப் பதிவு
- அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பிற்கான பதிவு.
- இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கானப் பதிவு.

கல்வித்தகுதிகள்
5-ஆம் வகுப்பு முதல், பத்தாம்/பன்னிரெண்டாம் வகுப்பு, இளங்கலை / முதுகலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ/ டிப்ளமோ, BE/ME/B.Tech.,/M.Tech., நர்சிங்/பார்மஸி கலந்து கொள்ளாலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட QR-Code-ஐ Scan செய்து தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தனியார்துறை வேலைவாய்ப்பு விவரங்களை தெரிந்து அறிந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 94990 55901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்சி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவா் தெரிவித்துள்ளனா்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.