ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம்!
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாவினிபட்டி கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்பு பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு தரிசு நிலத்தில் பட்டா வழங்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ரேஷன் கார்டு ஆதார் கார்டு ஒப்படைக்கும்போராட்டம் …
மதுரை மாவட்டம்கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுக்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் பஞ்சமி நிலமீட்பு இயக்க மாநில செயலாளர் மேலூர் சசி ஆகியோர் தலைமையில் மகளிர் இயக்க மாநில துணைச்செயலார் புலியம்மாள், தவமணி, மல்லிகா, காளீஸ்வரி, நாவணிப்பட்டி விசிக பொறுப்பாளர்கள் சிவா ரஞ்சித்குமார், பூமி ராஜ், தவசி சந்தனகுமார் முகேஸ்வரன், மருது, நாகராஜ், விஜயகுமார் மற்றும் மகளிர் விடுதலை இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.
மேலூர் வட்டம் நாவனி பட்டியில் வசிக்கும் தலீத்பகுதி 200க்கு மேற்ப்பட்ட பெண்கள் ஆதார், ஸ்மார்ட் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் தலீத் மக்கள் வசிக்கும் பகுதியில அரசு தரிசு நிலத்தை உள்ளது BC சமூகத்திற்கு பட்டா வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். பட்டா வழங்கினால் சாதிகலவரம் ஏற்படும் அபாயம் ஏற்படும் என போராட்டத்தில் கோஷங்கள் எழப்பினர்.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களிடம்களிடம் ஆதார், ஸ்மார்ட் கார்ட் ஒப்படைத்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்