RCB WIN 2025 IPL TROPHY வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் போலி ரீச்சார்ஜ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வாட்ஸ் அப் குழுக்களில் தற்பொழுது RCB WIN 2025 IPL TROPHY என்று தலைப்பிட்டு, இந்த ஆண்டு  IPL தொடரில் RCB வென்றதை கொண்டாடும் விதமாக JIO, VI மற்றும் Airtel ஆகியவை அனைத்து இந்தியர்களுக்கும் 3 மாதங்களுக்கு ரீச்சார்ஜை இலவசமாக வழங்குவதாகவும் கீழே கொடுக்கப்பபட்ட லிங்கை கிளிக் செய்து ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற ஒரு போலியான லிங்க் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ரீச்சாா்ஜ் மோசடி
ரீச்சாா்ஜ் மோசடி

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

Apply for Admission

அது  இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான link ஆகும். அந்த Linkஐ யாரும் Click செய்ய வேண்டாம் எனவும், அப்படி தெரியாமல் click செய்து விட்டால் அதில் கேட்கும் கேள்விகளான Mobile Number, Bank account number, OTP போன்ற தகவல்களை கொடுக்க வேண்டாம். இதனால் உங்களுக்கு பணமிழப்பு அபாயம் ஏற்படலாம் .

எனவே சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். மேலும் இணைய வழி சம்மந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள  1930/ 04132276144/ 9489205246 எண்கள் மூலமாகவோ அல்லது cybercrime.gov.in என்ற இணைய தள முகவரியிலோ இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.