ATMகளில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கபடாது ! பரவி வரும் வதந்தி !

0

செப்டம்பர் 01 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கபடாது. 100, 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை.

வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் ₹500 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பொதுமக்களுக்கு அதிகமாக வழங்குவதை உறுதி செய்யவே ரிசர்வ் வங்கி ஏப்ரல் 28 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அந்த அறிவிப்பில், “அடிக்கடி பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அணுகுவதை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வங்கிகளும், வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களும் (WLAOs) தங்கள் ஏடிஎம்கள் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு அதற்கான காலக்கெடுவதையும் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

Proof: rbi.org.in/Scripts/Notifi…

economictimes.indiatimes.com/industry/banki…

Leave A Reply

Your email address will not be published.