ஹலோ ஜீ தமிழ் …. மகதியை வெறுங்கையோடு அனுப்பியது நியாயமா ?

8

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மகதியை வெறுங்கையோடு அனுப்பியது நியாயமா ?

***********************************

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

ஜீ தமிழ் டிவியின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சி… தொழில்நுட்பச் சிறப்பு, தரக் கூட்டல் , பாடுவதற்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகளை நிகழ்ச்சியோடு கலக்க வைத்து இணைத்து சுவாரஸ்யப்படுத்துவது, தயாரிப்புத் தரம் என்று பல வகையிலும் மிக சிறப்பாக அமைந்தது .

கிரியேட்டிவ் , டெக்னிகல் மற்றும் மேலாண்மை டீம்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் . Bravo !

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

இது போன்ற பாடல் ‘போட்டிகள்’ நடுவரின் கண்ட்ரோலில் இருக்கும் வரை ( ஸ்வேதா மோகன் போன்ற ஓரவஞ்சனை நடுவர்களையும் மீறி) ஓரளவுக்காவது புரஃபஷனல் ஆக இருக்கிறது.

ஆனால் ஒரு நிலைக்கு மேல் பாடும் திறமையை விட, குறிப்பாக இறுதிப் போட்டியில் பாடும் திறம் என்பதை விட…… மக்களின் உணர்வுகளே வெற்றியைத் தீர்மானிக்கும் எனும்போது முடிவுகள் தரம் குறைந்து விடுகின்றன.

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 லிலும் அதுவே நடந்தது .

மனப்பூர்வமாக ஒன்று சொல்கிறேன் .

திவினேஷின் வெற்றி என்பது சமூக சமநிலை ரீதியாக கருத்தியல் ரீதியாக அபாரமான அற்புதமான ஒன்று . அது தரும் பெருமிதத்துக்கு அளவே இல்லை.

சங்கீதம் என்பதே ஒரு குறிப்பிட்ட மேட்டுக்குடி என்று அழைக்கப்படுவோர் … மற்ற சில நடுத்தரக் குடிகளில் வசதியானவர்கள் ….. இவர்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலையில் இருந்து மாறியதே ஒரு மாபெரும் சாதனை .

அப்படியே எல்லா சமூகத்தினரும் பாட வந்தாலும் …

ஜீ தமிழ் - சரிகமப
ஜீ தமிழ் – சரிகமப

“நீ யார்ட்ட பாட்டு கத்துக்கற ?” என்ற கேள்விக்கு , பதிலாக சொல்லப்படும் நபர் அந்த மேற்படி குடிகளைச் சேர்ந்த நபராகத்தான் இருக்கும் என்ற நிலையும் இருந்தது .

அதை விடுத்து, ” யார்கிட்ட பாட்டு கத்துக்கற/” கேள்விக்கு என்ற கேள்விக்கு , பின் தங்கிய சமூகத்தை சேர்ந்த ஒரு எளிய மனிதரைக் காட்டி , ” என் தாத்தா கிட்டதான் பாட்டுக் கத்துக்கறேன் ” என்று சொன்ன ஒரு சிறுவனான திவினேஷ்….

ஃ பைனலில் வெற்றி பெற்றதை விட ஒரு பெருமைக்குரிய சாதனை என்னவாக இருக்க முடியும்? அந்த வகையில் திவினேஷ் வின்னர் ஆனது மனதுக்கு உகந்த ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் மக்கள் மனதில் இடம் பிடிக்க மற்ற யாருக்கும் இல்லாத பெரும் வாய்ப்புகள் திவினேஷுக்கு நிகழ்ச்சியின் ஊடாகவே ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்பட்டன . ஒரு வகையில் அவனுக்கு ஓட்டுப் போட மக்கள் தயார் செய்யப்பட்டனர்.

கருத்தும் இனிமையும் கொண்ட பழைய பாடல்கள் என்ற அடையாளத்துக்குள் அவன் நுழைந்தது மிகப் பெரிய புத்திசாலித்தனம் .அல்லது இயல்பாக நிகழ்ந்த அதிசயம் . அல்லது அவன் தாத்தாவுக்கு அதுதான் தெரியும் என்ற பலவீனமே பலமாக மாறிய பேரதிசயம் .

இன்னொன்று அவன் பாடல்களை கேள்வி ஞானத்தின் மூலமே முழுக்க புராசஸ் செய்து பயிற்சியாளர்கள் சொல்வதைப் புரிந்து கொண்டு உயர்ந்த இடத்துக்குப் போய் நின்று பாடியது இன்னொரு அதிசயம்

அதனால் சிக்ஸ்டி பிளசில் இருக்கிற – நிகழ்ச்சிக்கு வந்த பிரமுகர்கள் எல்லாரும் அவனைக் கொண்டாட, அந்த பிரமுகர்களை மதிக்கிற பார்வையாளர்கள் எல்லாரும் இயல்பாக திவினேஷ் பக்கம் சாய்ந்தார்கள். அதிலும் முக்கியமாக கண்ணதாசனின் மகன் , எம் எஸ் வியின் பிள்ளைகள், டி எம் எஸ் மகன் ஆகியோர் வாழ்த்தியது ..

எம் எஸ் வி யின் சால்வை, ஸ்படிக மாலை, அதோடு கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ் ஆகியோருடன் திவினேஷ் இருப்பது மாதிரியான போட்டோ ஆகியவை மக்கள் மனதில் அவன் பாடுவதற்கும் மேலான பிம்பத்தைத் தந்தன . அவன் அற்புதமாக பாடி வந்தான் என்பதிலும் மாற்றம் இல்லை

தாத்தா வளர்த்த பிள்ளை என்பது இன்னொரு வகையில் அவனை எல்லோருக்கும் பிடிக்கக் காரணம் . உச்சமாக முதியோர் இல்ல பெரியவர்களின் கண்ணீரும் அன்பும் ஆசியும் மக்கள் மனதில் பெரும் சிகரமாகப் படிந்து அவனுக்கு வாக்களிக்கா விட்டால் தெய்வக் குத்தம் ஆகி விடும் என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது .

அவனுக்கு இணையாக வந்து கொண்டிருந்த யோகஸ்ரீக்கும் அமைச்சர் பாராட்டு, தேவா தந்த வாய்ப்பு, பூப்பு நீராட்டு விழா நடத்திய நிகழ்வு போன்றவை நடந்தாலும் அது எல்லாம் அவள் வறுமைக்கான நிவாரணமாகவே அதிகம் வெளிப்பட்டது .

திவினேஷின் வறுமையும் வெளிப்படுத்தப்பட்டு அதற்கும் நிவாரணம் கிடைத்தாலும் அவன் மூலம் வறுமையை விட பெருமிதமே அதிகம் வெளிப்பட்டது

மாறாக யோகஸ்ரீ மூலமும் பெருமிதம் கிடைத்தாலும் அவள் மூலம் பெருமிதத்தை விட வறுமையே அதிகம் வெளிப்பட்டது .

விளைவு ?

Apply for Admission

ஒரு போட்டியின் வெற்றியாளர் என்பது அவர் பாடும் முறையை வைத்து மட்டுமே தீர்மானிக்கப் பட வேண்டும் குறிப்பாக அவர் இறுதிப் போட்டியில் பாடும் முறையை வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும்.அதுதான் புரபஷனல் முறை

பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் வாங்கியதற்காக பிளஸ் டூவில் யாரும் அஞ்சு மார்க் அதிகம் போடுவது இல்லை. பிளஸ் டூவில் நிறைய மார்க் வாங்கியதற்காக யாரும் செமஸ்டரில் பத்து மார்க் அதிகம் போடுவது இல்லை. ஆனால் திவினேஷ் விசயத்தில் அவன் முன்பு பாடிய பாடல்கள், பாராட்டிய ஆட்கள், சம்பவங்கள் எல்லாம் அவனுக்கு இறுதிப் போட்டியில் எக்ஸ்ட்ரா பலம் கொடுத்தது . .

அதுவும் கண்ணதாசன் எம் எஸ் வி , டி எம் எஸ் போதாது என்று…. ஒரு நிலைக்கு மேல் திவினேஷ் தரப்பு புத்திசாலித்தனமாக எம் ஜி ஆரையும் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டது .

விளைவு ? அவனது பாடும் திறனை விட அவன் மீதான் அன்பும் இறுதிப் போட்டியில் துணை நின்றது .

விளைவு திவினேஷ் வின்னராகவும் யோகஸ்ரீ இரண்டாவது இடத்திலும் வந்தார்கள். திவினேஷ் தன் பாடல்கள் மூலம் சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வு பிரம்மதமானது . மறுக்கவில்லை. ஆனால் திவினேஷின் வெற்றியில் கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ் , வாலி, சிவாஜி, எம் ஜி ஆர், ஜெமினி, P B ஸ்ரீனிவாஸ் எல்லோருக்கும் பங்கு உண்டு .

ஆனால் யோகஸ்ரீயின் வெற்றி முழுக்க முழுக்க அவளுடையது . she herself owned the whole and complete success !

அதன் பிறகும் பாருங்கள் ஹேமித்ராவுக்கு இரண்டாவது ரன்னர் அப் கிடைத்தது . சிறப்பு

வெற்றி எதுவும் கிடைக்காவிட்டால் கூட ஸ்ரீமதிக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தொழில் வாய்ப்பு கிடைத்தது . அருமை

யோகஸ்ரீக்கு இரண்டாம இடமும் வீட்டு மனையும் கிடைத்தது . (வீட்டு மனையின் மதிப்பு ஆயிரக் கணக்கிலா? இல்லை லட்சக் கணக்கிலா என்று தெரியவில்லை) ஆகா .

திவினேஷுக்கு பத்து லட்ச ரூபாய் முதல் பரிசு , சுமார் எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள வண்டி கிடைத்தது. அபாரம்

ஆனால் மகதிக்கு ?

எல்லா பாடல்களையும் பாசாங்கு இல்லாமல் சிறப்பாக, “….. எப்படி கஷ்டப்பட்டு பாடுகிறேன் பார்த்தீர்களா/’ என்று காட்டிக் கொள்ளக் கூடச் செய்யாத கண்ணியம் கொண்ட — ஆனால் அதி அற்புதமாக அட்சர சுத்தமாகப் பாடிய மகதிக்கு?

”நான் மூச்சு விடாம எல்லாம் பாடல..” என்று எஸ் பி பியே ஒத்துக் கொண்ட பாடலை , அவரை விடவும் சிறப்பாக மூச்சுக் கட்டி பாடிய மகதியை ,

வெறுங்கையோடு அனுப்பியது நியாயமா ஜீ தமிழ் கனவான்களே? நினைக்கும்போதே திக்கென்று இருக்கிறதா இல்லையா?

இந்த கர்னாடக சங்கீத கலாச்சாரிகள் எல்லாம் செய்கிற மாதிரி முகத்தை அஷ்ட கோணலாக்கி கஷ்டப்பட்டு படுவதாக காட்டிக் கொண்டால்தான் பலன் கிடைக்குமா? உண்மைக்கு மரியாதை இல்லையா?

அவளுக்கும் புவனேஷுக்கும் எதாவது பலன் இருக்கும்படி ஸ்பான்சர்கள் மூலம் நீங்கள் ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா ஜீ தமிழ் ? குறைந்த பட்சம் அவர்களின் கல்விச் செலவுகளுக்கான தொகையை யாராவது ஸ்பான்சர்கள் ஏற்றுக் கொள்வது போல செய்து இருந்தார்கள் நன்றாக இருந்திருக்குமே

ஹலோ ஜீ தமிழ் ..

ஃபைனலுக்கு வரும் எந்தக் குழந்தையையும் இனிமேல் வெறும் கையேடு அனுப்பாதீர்கள். அது மனித குல அவமானம் . அவர்கள் மன நிலையை நினைத்துப் பாருங்கள். அந்த மனங்கள் எப்படி வாடிப் போகும் .

நான் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்தபோது சின்னச் சின்னச் சின்ன ஞாபகங்கள் என்ற பெயரில் ஒரு பள்ளிக் கூட பிள்ளைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றை இயக்கினேன்

இந்த அளவுக்கு எல்லாம் இல்லை என்றாலும் அதுவும் வாராவாரம் ஒரு குட்டித் திருவிழாதான்.

சிறு பிள்ளைகள் சம்மந்தப் பட்ட நிகழ்ச்சி என்பதால் யார் மனமும் வாடி விடக் கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருப்பேன். இத்தனைக்கும் முழு பொறுப்பும் என் தனி ஒருவன் தலையில்தான் இருக்கும்.

அந்த அளவுக்கு எல்லாம் எதிர்பார்க்கவில்லை.

பைனலுக்கு வரும் எல்லாரையும் வெற்றி பெற வைத்தால் அப்புறம் அது போட்டி இல்லைதான் . . ஆனால் வெற்றி பெறாதவர்களுக்கு உருப்படியாக ஒரு வீடு மனை , வண்டி வாகனம் , கல்வி உதவி என்று கொடுத்துப் பாருங்கள் .

உங்களை நினைத்தால் உங்களுக்கே பெருமையாக இருக்கும் .

 

Raja Thirumagan SU Senthilkumaran

Actor & Director & Content Creator & Script Writer at Film Industry

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

8 Comments
  1. ஜார்ஜ் says

    ரெம்ப சரியாக சொன்னீர்கள், நன்றி.

  2. Rajeswari says

    True. I agree.

  3. Sethu says

    In any contest all cannot win. When large number votes across places one cannot expect what one wants. Author’s sympathy for one may be there but crossing the limit bringing carnatic music, upper caste etc and telling judges made ground influencing etc are all rubbish and politics. Zee has taken from ordinary backgrounds everybody. Why blame them. If so much research was made earlier for 4 finalists 4 prizes could have been suggested earlier itself.
    It has become a curse in this state to make politics in everything and bring irrelevant things like caste/low society etc in all. Then what about similar vijay tv show.
    They select children with means and well off people.
    See saregamapa in malyalam and there are no comments like this.

  4. velu says

    I was very much upset by the worst treatment of zee TV, like you said mahathi had been rocking. all were given prices from the sponcers. it is not from the judges pocket. very horrible. I have promised not to see. Another worst thing was out of 7 hours, archana was occupying the entire show for more than 6 hours. 🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️

  5. Shankaran K says

    I agree with many of your points mentioned. ( Giving some sort of prizes to all the Finalists.)
    But I have some points for you.
    1. Are you learning Music? Who’s your music teacher? To be a successful musical singer you a strong Carnatic base. Even Ilayaraja while entering the Cine field was not having proficiency in Carnatic music. He was advised by a female singer I remember to learn Carnatic music. Then he learnt it from TV Gopalakrishnan which is history.
    You have forgotten one thing. The trainer for many of the kids are the “So Called Sanghis” in your language.
    Many are of the opinion that Yogashree should be announced as the Title Winner. But the winner is decided not as per Skill but by the Public Voting.
    Even Srimathi also sang very well.
    Finally God has a plan for everyone.
    What to Give!
    When to Give!
    So everything goes as per his Plans!!!

  6. Shankaran K says

    Mentioned above.

  7. Arunachalam Ramasami says

    நேர்த்தியான பதிவு. ஏழ்மையை, பொருளாதார ரீதியாக இயலாமையைப் பொதுவெளியில் காட்டும்போது அந்த சூழலில் இருக்கும் நபருக்கும் சங்கடங்கள் ஏற்படுத்த வாய்ப்புண்டு. முதலாவதாக சிறு குழந்தைகளுக்கு போட்டி என்ற பெயரில் அவர்கள் வயதுக்கு மீறிய அளவு அவர்களுக்கு பொருள் புரியாத பாடல்களை பாட வைத்து அதில் போட்டி நடத்துவது என்பது கூட அவர்களது மனநிலையை பாதிக்க வாய்ப்பு உள்ளது. கடைசி நிலைக்கு வரும் போட்டியாளர்களை ஒன்று இரண்டு மூன்று என்று தரம் பிரிக்காமல் அனைவருக்கும் சமமாக அன்பளிப்புகளை அளிப்பது சிறப்பு.

  8. திருவேங்கடம் யாதவ் says

    ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துட்டு மகதி உட்பட அந்த 3 பேரையும் அம்போன்னு விட்டது நியாயமே இல்லை.. 4-5-6 பரிசகள்னாவது தந்து தான் அனுப்பியிருக்கனும்.. மூனு பரிசுதான் தரனும்னு என்ன தெய்வத்தின் உத்தரவா!?
    ஜீ டிவி, நிகழ்ச்சியின் ஜட்ஜ்கள் , டைரக்டர் எல்லாம் 100 % மனதளவில் மாறுங்க இல்லேன்னா நாங்க 100% வேற சேனலுக்கு மாறிடுவோம்.

Leave A Reply

Your email address will not be published.