20 ஆண்டுகள் கோமாவில் இருந்த செளதி அரேபியா இளவரசர் அல்-வலீத் காலமானார்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘ஸ்லீப்பிங் பிரின்ஸ்’ என்று பரவலாக அறியப்படும் செளதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் காலமானார். அவருக்கு வயது 35. 1990-ஆம் ஆண்டு பிறந்த இளவரசர் அல்-வலீத், இளவரசர் காலித் பின் தலால் அல் சவுதின் மூத்த மகன். கடந்த 2005-ஆம் ஆண்டு, இவரின் 15வது வயதில் லண்டனில் இராணுவ மாணவராகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு கார் விபத்தில் ஏற்பட்ட பாதிப்பில் மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டது.

இளவரசர் அல்-வலீத் காலமானார்கடந்த இருபது வருடங்களாக கோமா நிலையில் இருந்தார். பல அமெரிக்க மற்றும் ஸ்பானிஷ் மருத்துவக் குழுக்களின் தீவிர சிகிச்சையில் இருந்தபோதிலும், இளவரசர் அல்-வலீத் முழு நனவை மீண்டும் பெறவில்லை. அவரது தந்தை, இளவரசர் மீண்டு வருவார் என்று கடவுள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். சில ஆண்டுகள் செல்லச் செல்ல, இளவரசர் அல்-வலீதின் மருத்துவமனை அறை ஒரு ஆன்மீக இடமாக மாறியது. அவரது மீட்புக்காக பல பிரார்த்தனைகளும் அங்கு நடைபெற்றது.

Srirangam MLA palaniyandi birthday

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

இளவரசர் அல்-வலீத் காலமானார்இந்த நிலையில் துரதிஷ்டவசமாக இளவரசர் அல்-வலீதின் உயிர் பிரிந்தது. அவரின் தந்தை தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் துக்கத்தை வெளிப்படுத்தி, “அல்லாஹ்வின் கட்டளை மற்றும் விதியில் முழு நம்பிக்கையுடன், ஆழ்ந்த துக்கத்துடனும் வருத்தத்துடனும், எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஸீஸ் அல் சவுத் இன்று அல்லாஹ்வின் கருணைக்கு சென்றுவிட்டார்” என்று பதிவிட்டிருக்கிறார்.

 

—   மு.குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.