தென் தமிழ்நாடு முற்போக்கு மண்ணா…சாதிய மண்ணா?
தமிழ்நாட்டில் சிறார்கள் செய்யும் குற்றங்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக கஞ்சா போதையினை தட்டிக்கேட்கும் ஆசிரியரை அடித்து உதைத்த மாணவர்கள் என்கிற செய்தி பரவலாக வரத் தொடங்கியிருக்கிறது.
தென் மாவட்டங்களில் சாதிரீதியிலான வன்முறைகள் அதிகரிக்கின்றன. சாதிக்காக வெட்டுக்குத்தில் ஈடுபடும் மாணவர்கள் வயது சராசரியாக 15லிருந்து ஆரம்பிக்கிறது.
சிறுவர்கள் பாடப்புத்தகப் பையில் அரிவாள்கள் எடுத்துச் செல்வது இன்று சர்வசாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. இது ஒரு சமூகப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆனால் இதுகுறித்து பேசக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
பாஜக ஆட்சிக்குப் பிறகு FCRA act ( foreign contribution regulation act)ல் கைவைத்துவிட்டதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பண உதவி நிறுத்தப்பட்டதால் இன்று சிறுவர்களுக்காக வேலை செய்யும் civil societies குறைந்துவிட்டன. அதனால் இன்று எந்த civil societyம் சிறுவர்களுக்காக வேலை செய்ய இயலவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
15 வயதில் அரிவாள் தூக்குபவனால் அவன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் என்ன பயன் என்பதைவிட அவனுக்கே அரிவாளால் என்ன பயன், கொலைகாரன் ரௌடி என்கிற பட்டங்களைத் தவிர?
இன்று social media என்பது எதையும் polarize செய்து கட்சி சார்பாக அடித்துக்கொள்வதை விட வேறெதையும் ஆக்கப்பூர்வமாக விவாதிப்பது இல்லை. (Social media is a dating app என்று சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல).
சிறுவர்களை ஒரு குறிப்பிட்ட சாதி வலிந்து திணிந்து கையில் அரிவாளைக் கொடுத்தால், அந்தச் சமூகத்திடம் போய் உரையாற்ற வேண்டியது அச்சமூகத்தில் இருக்கும் progressive thinkers-ன் முக்கியமான கடமை. அதை அவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தி.கவில் இருக்கும் so called முற்போக்காளர்களாவது அச்சமூக சிறுவர்களிடமும் பெரியவர்களிடமும் உரையாற்றுவது காலத்தின் கட்டாயம்.
செய்யத் தவறினால் அரிவாள் தூக்கும் சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் தான் வளர வேண்டி வரும்.
தென் தமிழ்நாடு முற்போக்கு மண்ணா…சாதிய மண்ணா?
— நாச்சியாள் சுகந்தி