கார சாரமான பூரி! சமையல் குறிப்பு – 16

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம், சமையலறை தோழிகளே! பொதுவாக பூரி என்றாலே காரமில்லாமல் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக தான் செய்து இருப்போம். ஆனால் புது விதமாக நான் சொல்லப்போகும் ரெசிபியை வைத்து காரசாரமாக தான் ட்ரை பண்ணி பாருங்களேன்.  குருமா செய்யாமல் வெறும் பூரியாக கூட சாப்பிடலாம். சரி வாங்க இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

இந்த வார அங்குசம் வார இதழில்…

ரவை ஒரு கப், கோதுமை மாவு ஒரு கப், மல்லித்தூள் ஒரு ஸ்பூன், மஞ்சத்தூள் ஒரு ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு ஸ்பூன், பூண்டு பவுடர் ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், எண்ணெய் பொறிக்க, உப்பு தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு.

செய்முறை:-

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவை, கோதுமை மாவு, மல்லித்தூள், மஞ்சத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், பூண்டு பவுடர், சீரகம், உப்பு, கொத்தமல்லி, தண்ணீர் சேர்த்து பூரி மாவு பிசைவது போல் நன்கு பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, எண்ணெய் காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வேண்டிய அளவில் தேய்த்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். இப்போது, நமக்கு காரசாரமான பூரி தயார்.

 பூரி
பூரி

இதனை, வெறுமனே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். இல்லையெனில் வழக்கம் போல் உருளைக்கிழங்கு மசால் அல்லது பன்னீர் கிரேவி, சென்னா மசால் ஆகியவற்றுடன் வைத்து சாப்பிடலாம் சுவை கூடும்.

 

 -பா. பத்மாவதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.