மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி ஔவை மன்றம் சார்பாக மன்றக்கூட்டம் !

0

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையில் ஔவை மன்றம் சார்பாக இளங்கலை மற்றும் முதுகலைக்கான மன்றக்கூட்டம் நடைபெற்றது. இளங்கலை மன்றக் கூட்டத்தில்இணைப் பேராசிரியர் சத்யா வரவேற்புரை வழங்கினார். ஆற்றுப்படையும் பயண இலக்கியமும் என்ற தலைப்பில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வினோத் சிறப்புரை ஆற்றினார்கள்.

4 bismi svs

முதுகலைக்கான மன்றக் கூட்டத்தில் துறைத் தலைவர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் சந்திரா வரவேற்புரை வழங்கினார். மேலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ் துறைத்தலைவர் முனைவர் கணேஸ்வரி கள ஆய்வு முறைகள் குறித்து உரையாற்றினார்கள்.இளங்கலை மாணவி தாமரைச் செல்வியும் முதுகலை மாணவி வசந்தாவும் நன்றி உரை வழங்கினார்கள். முனைவர் விஜெயம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார் நிகழ்ச்சியை முனைவர் முனிப்பாண்டியம்மாள் தொகுத்து வழங்கினார்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.