சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்..!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கோவையில் ஒரே நேரத்தில் 3 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாதா சீர்காழி சத்யா, நயினார் நாகேந்திரன் மற்றும் வினோஜ் முன்னிலையில் 2021ல் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

இவர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடி சத்யா உட்படுத்தப்பட்டவர். இந்த நிலையில் தொழிலதிபரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகாரில் அடிப்படையில்  போலீசாரால் தேடப்பட்டு வரும் ரவுடி சத்தியாவை ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், காரில் வந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

போலீசாரை தாக்கி விட்டு ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் தப்ப முன்ற போது போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சுட்டு பிடிக்கப்பட்ட சத்யாவிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் சுட்டதில் காலில் பலத்த காயம் அடைந்த ரவுடி சத்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துமனையில் சீர்காழி சத்யா
மருத்துமனையில் சீர்காழி சத்யா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இவர் மயிலாடுதுறையில் 2005ஆம் ஆண்டு டெலிபோன் ரவி என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாவார். சத்யா மீது மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 வழக்குகளும், தமிழகம் முழுவதும் 5 கொலை வழக்கு, 4 கொலைமுயற்சி வழக்கு, குற்ற வழக்குகள் என 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.