கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா !
10 நாள்களுக்கான நிகழ்ச்சி நிரல்கள்..!
நவம்பர் 24 இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 30 அன்று தேரோட்டமும் . டிசம்பர் 3 ந்தேதி மகா தீபத்தோடு நிறைவடைகிறது
திருவண்ணாமலை பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்க விழாவாக இன்று அதிகாலை3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, 63 அடி உயரமுள்ள தங்கக் கொடி மரத்தில், (இன்று நவம்பர் -24 ) விடியற்காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்கக் தங்க “கொடிமரத்தில் கொடி” ஏற்றப்பட்டது.
அப்போது, கூடியிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டனர் . தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் மாட வீதியில் வலம்வந்து அருள்பாலித்தனர். இன்று இரவு சிம்ம வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வலம் வருகிறார்கள். நாளைக் காலை தங்க சூரிய பிரபை வாகனத்திலும், இரவு வெள்ளி இந்திர வாகனத்திலும் வீதியுலா செல்லவுள்ளனர்.
அடுத்த வரும் 10 நாள்களுக்கு முக்கிய நிகழ்ச்சிகள். 10 நாட்கள் நடைப்பெறும் முக்கிய உற்சவங்கள் திருவிழா விவரங்கள்
24-11-2025 – திங்கட்கிழமை – முதல் நாளான இன்று காலை கொடியேற்றம் – மாலையில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்கள் வீதியுலா – இரவு உற்சவம் பஞ்சமூர்த்திகள் மற்றும் வெள்ளி அதிகார நந்தி, சிம்ம வாகனம், மயில் மூஷிகம் ஆகிய வாகனங்களில் சிறப்பு உற்சவம்.
25-11-2025 – இரண்டாம் நாள் உற்சவம்- காலை – விநாயகர், சந்திரசேகர் – தங்க சூரிய பிரபை உற்சவம். இரவு உற்சவம் -பஞ்ச மூர்த்திகள் – வெள்ளி இந்திர விமானம் புறப்பாடு
26-11-2025 – மூன்றாம் நாள் திருவிழா – காலை – விநாயகர், சந்திரசேகர் – பூத வாகனம். வீதியுலா இரவு உற்சவம் – பஞ்ச மூர்த்திகள் சிம்மவாகனம் – வெள்ளி அன்ன வாகனம் உற்சவம் நடைபெறுகிறது.
27-11-2025 – நான்காம் நாள் திருவிழா- காலை – விநாயகர் , சந்திரசேகர் – நாகவகம். வீதியுலா இரவு – பஞ்சமூர்த்திகள் – வெள்ளி காமதேனு, கற்பக விருச்சிக வாகனம் மற்றும் இதர வெள்ளி வாகனங்கள் உற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது.
28-11-2025 – ஐந்தாம் நாள் திருவிழா – காலை – விநாயகர் , சந்திரசேகர் – கண்ணாடி ரிஷப வாகனம் வீதியுலா. இரவு – பஞ்சமூர்த்திகள் வெள்ளிப் பெரிய ரிஷப வாகனம் உற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது.
29-11-2025 – ஆறாம் நாள் திருவிழா- காலை – விநாயகர் , சந்திரசேகர் – வெள்ளி யானை வாகனம் – 63 நாயன்மார்கள் வீதியுலா. இரவு – பஞ்சமூர்த்திகள் – வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள். உற்சவம் நடைபெறுகிறது
தேரோட்டம்
30-11-2025 – ஏழாம் நாள் திருவிழாவில் – காலை 6 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் விருச்சக லக்னத்தில் விநாயகர் தேர் வடம் பிடித்தல். அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் – “மகாராத தேரோட்டம்” நடைப்பெறும்
01-12-2025 – எட்டாம் நாள் – காலை விநாயகர் ,சந்திரசேகர் – குதிரை வாகனம். உற்சவம், மாலை – 4:30 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் : இரவு – பஞ்ச மூர்த்திகள் – குதிரை வாகனம் புறப்பாடு
2-12-2025 – ஒன்பதாம் நாள் – காலை – விநாயகர் , சந்திரசேகர் – புருஷா முனி வாகனம் புறப்பாடு, இரவு – பஞ்ச மூர்த்திகள் – கைலாச வாகனம் காமதேனு வாகனம். வீதியுலா
மாஹா தீபம்
03-12-2025 – பத்தாம் நாள் அதிகாலை 4 மணிக்கு “பரணி தீப தரிசனம்” . மாலை 6:00 மணிக்கு “மகா தீப தரிசனம்.”
04-12-2025 – தெப்பக்குளம் திருவிழா – இரவு 9 மணிக்கு சந்திரசேகர் தெப்பக்குளம் உற்சவம் நடைபெறுகிறது.
05-12-2025- தெப்பல் திருவிழா – 9 மணிக்கு பராசக்தி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
06-12-2025 – தெப்பல் திருவிழா – இரவு ஒன்பது மணிக்கு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவத்தோடு தீப திருவிழா முடிவடைகிறது
— மணிகண்டன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.