அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வராக அவதாரம் – (பன்றி அவதாரம்)-ஆன்மீக பயணம்

திருச்சியில் அடகு நகையை விற்க

மச்ச அவதாரம், கூர்ம அவதாரம் தொடர்ந்து விஷ்ணு எடுத்த மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். இதில், விஷ்ணு காட்டுப்பன்றி அவதாரம் எடுத்திருக்கிறார். உலகில் முக்கடவுளில் ஒருவரான விஷ்ணு பல அவதாரங்களை எடுத்துள்ளார். அதற்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அதாவது, தீமைகள் ஏற்படுத்தும் அரக்கர்களை அழிக்கவே விஷ்ணு இதுபோன்று அவதாரங்களை எடுத்தார். விஷ்ணு புராணத்தில் வராக அவதாரத்தை தியாகத்தின் அடையாளமாக கூறப்படுகிறது.

வராக அவதாரம் என்பது விஷ்ணு ஒரு மிருகத்தின் தலையை கொண்டு பிறந்த அவதாரம் தலை மட்டும்தான் மிருகம் உடல் மனிதனைப் போன்று தான். மாதஸ்யா மற்றும் கூர்மா அவதாரம் என்பது மேல்பகுதி மனித உடலாகவும் கீழ்பகுதி மிருக உடலாகவும் கொண்டுள்ள அவதாரம் ஆகும். நாணயங்களில் வராக ஓவியத்தை சித்தரித்து அதனை வணங்கி பயன்படுத்தி வந்த முதல் வம்சம் சாளுக்கியர் ஆவார். இந்தியாவில் முஸ்லிம்கள் வரும்வரை வராகாவை தெய்வமாக வணங்கினார்கள்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வராக அவதாரம்முஸ்லிம்கள் பன்றிகளை தூய்மையற்றதாகவும், அசுத்தமானதாகவும் கருதினார்கள். அன்றிலிருந்து பன்றி என்பது அசுத்தமானது என்று மக்கள் நம்பினார்கள். இதனால், வராக வழிபாடு குறைந்தது. முதல் மில்லினியர் தலைமுறை மக்கள் வராகாவை ஆண்மைக்கு அடையாளமாக கருதினார்கள். ஹிரண்யசஷ்ய என்ற பிசாசு பூமியை கடலின் அடிப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டது. அப்போது, பூமித்தாய் தனக்கு உதவுமாறு விஷ்ணுவிடம் கேட்டார். இதற்காக, விஷ்ணு வராக பன்றி போன்று அவதாரத்தை எடுத்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அவர் ஹிரண்யசஷ்ய என்ற பிசாசை கொன்று உலகத்தை கடலுக்கு அடியில் இருந்து தன் தந்தத்தினால் மேலே கொண்டு வந்தார். வராக அவதாரத்தினால் பூமி கடலில் இருந்து வெளியே வந்தது. இதனால், உலகத்தின் புதிய சுழற்சி தொடங்கியது. விஷ்ணு புராணத்தின் கூற்றுப்படி வராகவித்வின் ஒவ்வொரு உடல் பாகமும் ஒவ்வொன்றை குறிக்கிறது. வராக வித்வின் கால்கள் வேதங்களை குறிக்கிறது. தந்தங்கள் துன்பத்தை குறிக்கிறது. மூட்டுகள் வெவ்வேறு விழாக்களை குறிக்கிறது. காதுகள் சடங்குகளை குறிக்கின்றன. கரடு முரடான முடிகள் பாலியல் மேம்பாடுகளையும், கண்கள் பகல் மற்றும் இரவை குறிக்கிறது. மூக்கு பரிசு பொருட்களை குறிக்கிறது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

வளம் பெருக்கும் வராகர் தலங்கள் - Kungumam Tamil Weekly Magazineதென்னிந்தியாவில் பல பகுதிகளில் பகவான் வராகாவை வழிபடுகிறார்கள். விஷ்ணுவின் வராக அவதாரம் கொண்ட பல கோயில்கள் உள்ளன. திருமலை கோயில் ஸ்ரீ முஷ்ணம் கோயில், தெலுங்கானா செகந்திர பாத்தில் உள்ள வராக சுவாமி கோவில் ஆகியவை வராகாவின் புகழ் பற்ற கோவில்களில் சில ஆகும். வராகவுக்கும் திருப்பதி கோவிலுக்கும் ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது.

ஒருவர் திருப்பதி கோயிலுக்கு சென்றால் முதலில் திருப்பதியில் ஆதி வராக சேஷத்திரத்தில் உள்ள வராக கோவிலுக்கு சென்று தான் வணங்குவார்கள். பின்னர், தான் வெங்கடாஜலபதியை வணங்கச் செல்வார்கள். வராக அவதாரத்தின் பரிணாமத்தை குறிக்கும் வகையில் பலர் வராக அவதார் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். இந்த விழாவை கொண்டாடும் போது விஷ்ணு மற்றும் அவரது தசாவதாரங்களின் கதைகளை நினைவு கூர்ந்து இரவு முழுவதும் பிரசங்கம் செய்வார்கள். சிலர் இந்த நாளில் நோன்பு மேற்கொள்கிறார்கள். இந்த நாளில் நோன்பு இருப்பவர்கள் அதைத் தொடர்ந்து கலசத்தில் விஷ்ணுவின் சிறிய சிலையை வைத்து வழிபாடு செய்து நோன்பை முடிக்கிறார்கள்.

 

 —   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.