வாழையடி வாழையாய் … ! வாழ்க்கை வாழ்வதற்கே – தொடர் – 08
வாழை வாழவைக்கும். வாழை இலை , வாழைப்பூ வாழைத்தண்டு, வாழைக்காய், வாழை குருத்து, வாழைப்பழம் என அடி முதல் நுனி வரையில் அனைத்தையும் சமூகத்திற்கு வாரி வழங்கும் வள்ளல்தான் வாழை.
மங்களகரமான நிகழ்வுகளில் விருந்தினர்களை முதல் ஆளாய் வரவேற்பது வாழைதான். கடவுளுக்கான படையலில் முதல் இடம் வாழைப்பழத்துக்குத்தான்.”வாழையடி வாழையாய்” என்ற சொற்றொடர்போலவே, வாழ்நாள் வரை தொடரும் வாழை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நீங்கா இடம் பிடித்த நட்புத் தாவரம்.
வாழை இலைகளில் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் பச்சையம் என்ற சொல்கிற குளோரோபைல் இருப்பதினால் வயிற்று பாதைகள் வராது. வாழைத்தண்டு சிறுநீரகப் பிரச்சனை, சிறுநீரகக் கற்களை உடைக்கும் வல்லமை கொண்டது . வாழைப் பூ வயிற்றுப் புண் ஆற்றும். வாழைப்பழம் மலச்சிக்கலை சுகப்படுத்தும். வாழையின் அனைத்து பாகங்களுமே, மனிதனின் வாழ்வாதாரத்தை வாழ வைப்பது.
— பேரா அருள் சா







Comments are closed, but trackbacks and pingbacks are open.