அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள் ! திமுக ஆட்சி நம்மை காப்பாற்றுமா ? – மதுரையில் ”மைக்” பிடித்த தமிழிசை சௌந்தர்ராஜன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

முன்னாள் புதுச்சேரி ஆளுநரும், பாஜக நாடாளுமன்ற வேட்பாளராக தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

”திமுக அரசு சென்னை, மதுரை, திருச்சி என அனைத்து மாவட்டங்களையும் மழைக்கு தயார் செய்வதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. உதயநிதி வார் ரூமில் அமர்ந்து விட்டதால் மழைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். விடியா அரசு இன்று விளம்பர அரசாக மாறிவிட்டது. மிகப்பெரிய வானியல் சாகசத்தை கூட மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க கூடிய ஏற்பாடுகளை செய்ய முடியாத அரசு எதற்கெடுத்தாலும் விளம்பரம் தான்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தமிழிசை சௌந்தரராஜன் அன்னை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள். ஆனால், இந்த திமுக ஆட்சி நம்மை காப்பாற்றுமா என்றுதான் கவலையாக உள்ளது. திமுக ஆட்சியில் பருப்பு கூட வேகாது போல உள்ளது. தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைக்காது என அச்சுறுத்தல் மக்களிடம் இருக்கிறது. ” என்பதாக பொரிந்து தள்ளியவர், அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறதே?

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இது மிகப்பெரிய வெற்றி. வெற்றி பெற்ற கூட்டணியை விட காஷ்மீரில் பாஜக 25 சதவீதம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏழு சதவீதத்திற்கு சுருங்கி விட்டது. காங்கிரசுக்கு எதிர்காலமே இல்லை. ராகுல் காந்தி மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து விட்டார் என்று சொன்னார்கள் ஆனால் செயற்கைத் தலைவர்களை உருவாக்க முடியாது மோடிஜி போன்ற இயற்கையான தலைவர்கள் தான் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

ரயில் விபத்து மத்திய அரசின் சதி என்ற குற்றச்சாட்டு குறித்து?

ராகுல் காந்தியை வன்மையாக கண்டிக்கிறேன். ரயில் விபத்துகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். திமுக எதை எடுத்தாலும் அரசியலாக்கும். திமுகவின் கூட்டணி கட்சிகளே அதற்கு எதிராக திரும்பி இருக்கிறது. 2026 நிச்சயமாக இதே திமுக கூட்டணி நிலைக்காது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சாம்சங் விவகாரத்தை வைத்து கம்யூனிஸ்ட் வேறு எங்கோ செல்கிறார்கள், மதுவிலக்கு பிரச்சனையை வைத்து விசிக ஒரு புறம் செல்கிறார்கள், தங்களுக்கும் ஆட்சியில் பங்கு எடுக்க வேண்டும் என்று தம்பி கார்த்திக் சிதம்பரம் இப்போதுதான் கொஞ்சம் தைரியம் வந்து பேசி இருக்கிறார். 2026 தேர்தலுக்கு திமுக கூட்டணிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெள வெளுத்து போகும்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்து?

தேர்தல் வரும்போது எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை எங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுப்பினர்களை சேர்ப்பதுதான். கூட்டணி குறித்து எங்கள் அகில பாரத தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

சீன தயாரிப்புகளுக்கு தடை விதித்திருப்பது குறித்து?

நிர்மலா சீதாராமனுக்கும், பியூஸ் கோயலுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர் என்கிற முறையில் நன்றி சொல்கிறேன். மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.

தவெக தலைவர் பாதை மாறுகிறாரா ?

அரசியல் கட்சித் தலைவர் தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்வது ஆரோக்கியமான சூழ்நிலைதான். ஆனால் தற்போது உள்ள சூழலில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்கள் எதிர்பார்கள். இந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு ஆதரவு தர மறுப்பார்கள் என்கிறது தான் இன்றைய சூழ்நிலை. அதைத் தம்பி விஜய் உணர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். ” என்பதாக தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார்.

 

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.