இனி ATM-ல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம்..
மற்ற வங்கி ATM-ல் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
இந்த இலவச அனுமதிக்கு மேல் பயன்படுத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் இடையேயான கட்டணமும், கட்டண உயர்வும் பொருந்தும்.
ஏ.டி.எம்.களில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை அதிகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஒரு வங்கி கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17-ல் இருந்து, ரூ.2 அதிகரிக்கப்பட்டு ரூ.19-ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல் வழங்கி உள்ளது.
ரொக்கம் அல்லாத ஏ.டி.எம். பரிவர்த்தனைகளான பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு, ரூ.1 அதிகரிக்கப்பட்டு, ரூ.6-ல் இருந்து ரூ.7-ஆக கட்டணம் உயரும் என தெரிகிறது.
மேலும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை தாண்டினால் மே 1ஆம் தேதி முதல் கூடுதலாக ரூ.2 வசூலிக்கப்படும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதாவது அதே வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கான கட்டணம் ரூ.21-லிருந்து ரூ.23ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருவர் அவருடைய சொந்த வங்கி ஏடிஎம்மில் மாதம் 5 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.
அதைப்போல, பிற வங்கி ஏடிஎம்களில் மெட்ரோ நகரமாக இருந்தால் மாதம் 3 முறை கூடுதலாக இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். மெட்ரோ நகரமல்லாத பிற பகுதிகளாக இருந்தால் மாதம் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.