சிறுமலர் தொடக்கப்பள்ளி 81 வது ஆண்டு விழா !
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிறுமலர் தொடக்கப்பள்ளி சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மற்றும் இதய நர்சரி பிரைமரி பள்ளி சார்பாக பள்ளி வளாகத்தில் 81 வது ஆண்டு விழா இல்லத்து தலைமை அன்னை ஜோரிஸ் மேரி ரொசாரியோ தெரஸ் முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சின்னசேலம் புனித தெரசா ஆலய பங்குத்தந்தை டோமினிக் சாவியோ, இருப்பு குறிச்சி தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்திரு. லூர்து ஜெயசீலன், சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு சாதித்துக் காட்டுங்கள் கனவுகளோடு செயல்படுங்கள்.
பிறரை ஏமாற்றினால் நீ ஏமாந்து போய் விடுவாய். கவனத்தோடு தொடர்ந்து செயல்படுங்கள் விழித்துக் கொள்கிறவன் பிழைத்துக் கொள்கிறான். கைபேசியை அளவோடு பயன்படுத்துங்கள் அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள். முயற்சி கைவிடப்படும் போது அது தோல்வி நீ முயற்சி செய்யும் போது ஒரு நாள் உனக்கு வெற்றியை தரும் கடவுளின் திரு அருளும் நமது திறமையும் நம்மோடு இருந்தால் நிச்சியமாக அது வெற்றியைத் தரும்.
அன்றாட வாழ்வில் எதையாவது ஒன்றை கற்றுக் கொண்டிருங்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளையும் கருத்துகளையும் கேட்டு கட்டாயமாக கடைப்பிடித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்று மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார்கள்.
மாநில, மாவட்ட அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு முதலாம் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்த மற்றும் பத்தாம் வகுப்பு 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கேடயம் சான்றிதழ் சிறப்பு பரிசு வழங்கி சிறப்பித்தார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சி, பரதநாட்டியம், குரு நாடகம், நாட்டுப்புறப் பாடல், கலை நிகழ்ச்சிகள், யோகா, கராத்தே, சிலம்பம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியைகள் அருட் சகோதரிகள் அனைத்து பணியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.