தமிழ்நாடு அரசின் டிஜிபி தேர்வுப் பட்டியலில்….
வரும் சில நாள்களில் தமிழ்நாட்டுக்கு புதிய போலீஸ் டிஜிபியாக திரு. மகேஷ்குமார் அகர்வால் பெயரைப் பரிந்துரைக்க அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
தேர்தலுக்கு (2026) நாள்கள் குறைவாய் இருந்த காலகட்டம். பொறுப்பு போலீஸ் டிஜிபி திரு. வெங்கட்ராமனை, தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து, புதிய போலீஸ் (தற்காலிக) டிஜிபியாக சந்தீப்ராய் ரத்தோரை நியமித்தது.
இதற்கிடையில், மாண்புமிகு ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசானது, மே-2026 ல் உருவானது. தமிழ்நாட்டுக்கு புதிய போலீஸ் டிஜிபி நியமிக்கப்பட வேண்டும். அதற்கான கால நேரமும் நாள் கணக்கில்தான் உள்ளது.
தமிழ்நாடு அரசின் தேர்வுப் பட்டியலில், மூவரின் பெயர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, டிஜிபி தகுதி (அந்தஸ்து) சீனியர் வரிசையில்,1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரிகள் திரு. ராஜீவ்குமார், திரு. சந்தீப்ராய் ரத்தோர் பெயர்களும், அதே டிஜிபி தகுதி நிரம்பிய அடுத்த பேட்ச் (1994) சில் திரு. மகேஷ்குமார் அகர்வால் பெயரும் உள்ளன.
— ந.பா.சேதுராமன், பத்திரிகையாளர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.