டாஸ்மார்க் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம் !
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்து டாஸ்மார்க் ஊழியர்கள் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறையினர் டாஸ்மார்க் ஊழியர்கள் அவர்களது குடும்பத்தில் கலந்து கொண்ட பெண்களையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
25 ஆண்டுகளாக பணி செய்து வரும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிலையான சன்மான ஊதியம் வழங்கிட வேண்டும், பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் என்றும் காளி மதுபாட்டில் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கப்பலூர் டாஸ்மாக் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.