முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று (ஆக்.06) காலமானார்.

பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ், 67 , கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக  பணியாற்றினார்.
வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டும் என்று கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .

இந்நிலையில், சுஷ்மாவுக்கு இன்று (ஆக.,06) அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கவலைக்கிடமாக அவர் இருந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. முன்னதாக சுஷ்மாவை பார்க்க மத்திய அமைச்சர்கள் ஹர்சவர்தன் ஸ்மிருதி இரானி, நிதின் கட்காரி எய்ம்ஸ் மருத்துவமனை வந்தனர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.