அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எம்.பி திருநாவுக்கரசர் திருச்சி மாநகராட்சி வார்டு பகுதிகளில் பொதுமக்களுடன் சந்திப்பு!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

எம்.பி திருநாவுக்கரசர் திருச்சி மாநகராட்சி வார்டு பகுதிகளில் பொதுமக்களுடன் சந்திப்பு!

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கடந்த சில நாட்களாக திருச்சி மாநகராட்சி வார்டு பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை நேரில் கேட்டறிந்து மனுக்களை பெற்று அதற்குரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டு வருகிறார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இதன்படி 14.06. 2023 புதன்கிழமை 48 வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை சாலையில் அமைந்துள்ள வார்டு அலுவலகம் , 48 ஏ வார்டு க்கு உட்பட்ட பொதுமக்களிடம் பொன்மலை ஆர்மரி கேட் பகுதியில் மற்றும் 46வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

யாவரும் கேளீர்

இந்நிகழ்ச்சிகளில் பொன்மலை பகுதி திமுக செயலாளர் மற்றும் கவுன்சிலர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், கவுன்சிலர் கோ. ரமேஷ்,  திமுக வட்டச் செயலாளர்கள் வரதராஜன், முருகானந்தம், தமிழ்மணி, ஜமால், பகுதி துணைச் செயலாளர் ஜெகதாம்பாள், இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி கோபி, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி, கோட்டத் தலைவர் செல்வகுமார், வட்டத் தலைவர் மார்ட்டின் அலோன்சா, செயலாளர் குமரேசன், பொருளாளர் எட்வின் ராஜ், மாவட்ட நிர்வாகி அர்ஜுனன் உட்பட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் இருந்து சுமார் 100 மனுக்கள் பெறப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.