அவதூறு வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபர் 50 இலட்சம் நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு.. !
அப்சரா ரெட்டி
யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூடியூபில் பரப்பியதாக ஐகோர்ட்டில் அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டி நஷ்ட ஈடு வழங்க கோரிய வழக்கில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…
2026 June 11 - 17 Angusam Book
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டி மீது சுமார் 10 அவதூறான மற்றும் அவதூறான வீடியோக்களை யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் பதிவேற்ற செய்தார்.
இதனால், அப்சரா ரெட்டிக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கிவிட்டது. இந்நிலையில், யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூடியூபில் பரப்பியதாக அப்சரா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் யூடியூபர் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அப்சரா ரெட்டி கோரிக்கை வைத்திருந்தார்.
யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்; யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. யூடியூபில் கருத்துகளை வெளியிட உரிமை உள்ளது என்றாலும் தனிப்பட்ட நபரின் உரிமையில் தலையிடக்கூடாது. எனவே, அதிமுக செய்தி தொடர்பாளரும், திருநங்கையுமான அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு யூடியூபர் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனிநபரின் குணங்கள், வாழ்க்கை பற்றி கருத்துகளை வெளியிடுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending