திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மின்கலனால் இயங்கும் ஸ்கூட்டர் / இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் பழுதடைந்திருப்பின் அதற்கு பதிலாக மீண்டும் புதிய வாகனம் பெற்றிட மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Kauvery Cancer Institute App
அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..
எனவே மேற்படி வாகனம் பெற்றிட விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தனித்துவ அடையாள அட்டை (UDID card), ஏற்கனவே பெற்ற வாகனத்தின் பதிவு புத்தகம் (RC Book) ஆகியவற்றின் நகல்கள் மற்றும் போட்டோ – 2 ஆகிய ஆவணங்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள முகவாிக்கு,
புதிய வாகனம்
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி-620001 தொலைபேசி எண்: 0431-2412590 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ வருகின்ற 11.11.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending