விராட் கோலியின் உருவத்தை சூரிய ஒளி மூலம் வரைந்த விருதுநகர் இளைஞர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 36 ஆவது பிறந்த நாளையொட்டி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரது உருவத்தை சூரிய ஒளியில் தத்துரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.

வீடியோவை காண

Sri Kumaran Mini HAll Trichy

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக். இவர் சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் துறையில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இளம் வயதிலேயே ஓவியத்தின் மீது ஆர்வம் இருந்து வந்ததால்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

இவர் தற்போது வித்தியாசமான முறையில் சூரிய ஒளி மற்றும் கண்ணாடி லென்ஸ் மூலமாக ரப்பர் பலகையில் நடப்பு முக்கிய சம்பவங்கள் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ஆகியோரின் பிறந்தநாளில் தினத்தில் அவர்களை கௌரவிக்கும் விதமாக ஓவியங்களை சூரிய ஒளி மூலமாக வரைந்து வருகிறார்.

அந்த வகையில் இன்று நவம்பர் 5ம் தேதி இந்திய கிரிக்கெட்  வீரர் விராட் கோலியின் 36வது பிறந்தநாள் விழாவை நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  கிரிக்கெட் வீரர்கள் பலரும் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  ஓவியரான கார்த்திக் இன்று கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பிறந்த நாளையொட்டி சூரிய ஒளியில் அவரது உருவத்தினை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.

 

  — மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.