விருதுநகர் – சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விருதுநகரில் சாலை விபத்தில் உயிரிழப்பு காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம்,சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய இரண்டு வட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு, காயம் அடைந்தவர்களுக்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

நிதியுதவிஅதன்படி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள்  19 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதமும், கண், கைகள்  இழப்பு போன்ற பெரும் காயமடைந்தவர்கள் 12 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் விதமும்,

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிறு காயங்கள் அடைந்த  6 நபர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் விதமும், மொத்தம் 37 பயனாளிகளுக்கு, ரூ.25 லட்சத்தி 60 ஆயிரத்திற்கான காசோலையை வட்டாட்சியர் சிவக்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார்.

நிதியுதவிமேலும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 கோடிக்கு மேல் சாத்தூர், விருதுநகர், வெம்பக்கோட்டை  பகுதிகளில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் ஆவணங்கள் சரிபாக்கப்பட்டு மீதமுள்ள நிதி வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

— மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.